குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 13, 2023

சிந்தாந்தி ஒருவருக்கு நான் எழுதிய பதில்

ஒரு கடும் சிந்தாந்தி ஒருவருக்கு நான் எழுதிய பதில்: அதை அவருக்கு நேரே பதிலிட்டால் வாதம் தொடர்ந்து பித்தமாகி, தொந்தமாகி, ரோகமாகி எனது நேரம் வீணாகி விடும் என்பதாலும் எல்லா கடும் சிந்தாந்திகளுகும் இந்தக் கருத்தை தெரிவிக்க விரும்புவதாலும் இங்கு பதிவிடுகிறேன்:   
"உங்கள் உரையாடலில் சைவசித்தாந்ததைப் பற்றி நீயெல்லாம் உரையாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற மமதையும், நான் ஏதோ சைவசித்தாந்ததைக் கெடுக்க வந்த மாற்று மதத்தவன் என்று சந்தேகமும் முன்துணிபும், உங்களுக்கு மாத்திரமே சைவ சித்தாந்தம் எழுதிக்கொடுக்கப்பட்ட சொத்து என்ற நினைப்பு இருக்கிறது; இப்படியொரு நிலையில் நாம் சுமூகமாக உரையாட முடியாது; எனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது நான் சொல்வதை நீ கேள் என்ற நிலையில்தான் நீங்கள் உரையாடுகிறீர்கள்; இப்படியான நிலையில் நான் பெரிதா நீ பெரிதா என்று மாத்திரம்தான் வாதிட முடியும்; நான் இப்படியான வாதங்களைச் செய்ய விரும்பவில்லை! ஆன்ம அனுபவத்திற்குரிய ஒரு ஞானத்தை - சித்தாந்ததை வெறுமனே மலங்கள் நிறைந்த புத்தியாலும் மனதாலும் தர்க்கிப்பதில் என்ன பயன்?
சித்தாந்தம் என்ற உயர்ந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் பழந்தமிழில் இப்போது உள்ள எவரும் படிக்க முடியாமல் இருக்கும் சிவ ஞான சித்தியார் அறுவர் உரையை எளிமையாக்கி அனைவரும் புரியும் படி தினசரி பதிவிடுங்கள்! 
வாலையானந்தர் நூறு வருடங்களுக்கு முன்னர் concept diagram மூலம் சித்தாந்த பட விளக்கம் என்று ஒரு நூல் மூலம் முயற்சித்தார்; இன்று நவீன animation ஐ பயன்படுத்தி எவ்வளவோ அருமையாக சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை மக்களின் மனதிற்கு கொண்டுபோய்ச் சேர்க்கலாம்! 
யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த பீடம் இருக்கிறது; தற்கால மக்களின் மனதிற்குப் புரியுமாறு எளிமையாகச் சித்தாந்ததை எடுத்துரைப்பது என்ற ஒரு ஆய்வும் இல்லை! யாருக்கும் விளங்காத பழைய பண்டிதரின் கனைப்புக் குரலில் ஒருவருக்கும் விளங்காமல் பேசினால் எப்படி இளைஞர்களுக்குப் போய்ச் சேரும். 
அதைவிடுத்துவிட்டு ஸமர்த்தர்களை எதிர்க்கிறேன், சாய்பாபாவை எதிர்க்கிறேன் என்று எப்போது பார்த்தாலும் குரோதமும், குழப்பமும், எதிர்ப்பேச்சும் பேசி ஒரு உயர் ஞானமரபினை குழாயடிச் சண்டை ஆக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 
சிவ ஞானசித்தியாரிற்கு மாதவச் சிவ ஞான யோகிகள் எழுதிய உரைப்பாயிரத்தில் "சிவ சீவ சம்பந்தத்திற்கான 13 உவமைகளையும் படித்து சிந்தித்தால் இன்றைய குவாண்டம் இயற்பியலில் கோட்பாட்டுக் கூறுகள் இருப்பதை உணரலாம். இப்படி உயர் ஞானத்தை அனுபவித்து உணர்ந்து மற்றவர்களும் உணரக்கூடிய வகையில் நாம் சுவையாக பரிமாற வேண்டும்; தூண்ட வேண்டும். இப்படி இந்த ஞானம் அனைவருக்கும் சென்றடையும் போது தான் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...