குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 20, 2023

இசை

இன்று ஒரு மகிழ்ச்சியான செய்தி! 
எனக்கு கற்றலில் பற்பல ஆசைகள் உண்டு; அதிலும் புராதன ஞானமாக இருந்தால் அதில் தீராக் காதல் உண்டு; 
கந்தர்வ வேதம் எனும் இசை எல்லோர் மனதினையும் மயக்குவது; இதைக் கற்க வேண்டும் என்று நான் நினைத்த போது எனது தர்க்க புத்தி மனதிற்கு பதில் தரக்கூடிய ஆசிரியர்கள் எவரும் வாய்க்கவில்லை! அவர்கள் எல்லோரும் தம்மளவில் வித்வானாகவே இருந்தார்கள்; எனக்கு எனது பக்குவத்திற்கு தக்க பரிமாறும் ஆசிரியர் எனக்கு வாய்க்கவில்லை; அன்னையின் அருளால் அத்தகைய இசையின் நுணுக்கங்களை தர்க்க மனதிற்கு விளக்கி, பின்னர் மனதை பயிற்சிமூலம் பதப்படுத்தி, குரலில் ஸ்வரத்தைக் கொண்டு வந்து இசை வருவிக்கும் திறனுடையவர் ஆசானாக வாய்த்தார். 
ஒரு வருடம், வாரத்தில் ஐந்து நாட்கள் வேணு எனப்படும் புல்லாங்குழலும், குரலிசையும் முறைப்படி கர்நாடக சங்கீதத்தில் குருவின் வழிகாட்டலில் பயிற்சி செய்தேன். 
ஒவ்வொரு வருடமும் புதிது புதிதாக எதையாவது கற்று மூளையை இளமையாக வைத்திருப்பது என்ற எனது கோட்பாட்டிற்கமைய 2022 இலக்குகள். 
1) குரலிசை கற்றல்
2) வேணு எனும் புல்லாங்குழல் கற்றல்
நிறைவேறியது. இன்று காலை கந்தர்வ வேத இசைக்குரு நாதர் அழைத்து நீ பூர்த்திச் செய்த இசைப்பயிற்சிக்கு சான்றிதழ் அனுப்பியிருக்கிறேன், மின்னஞ்சலைத் திறந்து பார் என்றும் பிறந்த நாள் ஆசியும் கூறினார். 
எந்த வித்தை கற்றாலும் குருவின் அன்புக்கு பாத்திரமான மாணவனாக இருக்கும் பாக்கியம் அன்னையின் அருளால் வாய்ப்பது! 
இசையும் நாத சக்தியும் உன்னை விட்டு விலகாமல் எப்போது உன்னுள் இசை கற்கும் உத்வேகத்தைத் தூண்டிக் கொண்டிருக்கட்டும் என்று ஆசி கூறினார். 
எனது இசைக் கற்கும் நோக்கம் இசையை இரசிக்க அதன் இலக்கணம் தேவை என்பதும், நாத ஆற்றலை எப்படியெல்லாம் மனதிற்கு இன்பமாகப் பயன்படுத்தாலாம் என்பது! 
வீணை, மிருதங்கம், தாண்டவம் கற்க வேண்டும் என்பது ஆசை! அன்னை இன்னுமொரு சுற்றில் இவற்றிற்கெல்லாம் வாய்ப்புத் தருவாள் என நம்புகிறேன். 
பரத சாஸ்த்ரத்தின் அபிநய தர்ப்பணம், அபி நவபாரதி பற்றியெல்லாம், யோக தாந்திரீக நுணுக்கங்கள் உரையாடியிருக்கிறோம். 
எனது கந்தர்வ வேத குருநாதர் ஸ்ரீ நாட்டியாச்சார்யா ஸ்ரீ பாலச்சந்த்ர ராஜு அவர்கள்! 34 இசைக் கருவிகள் வாசிக்கும் ஆற்றலும், மற்றவர்களுக்கு கற்பிக்கும் ஆற்றலும் உள்ளவர். இவரது இராக பாவார்த்தம் என்ற நூலே பிரபலமான ருத்திர வீணைத் தொடரின் முதல் பகுதியில் ராகங்களின் ஆற்றல் பற்றி வரும் குறிப்பாகும்!
வெறும் முதல் வகுப்புத் தான் சித்தியடைந்திருந்தாலும் இன்றைய நாளில் இந்த ஆசி கிடைத்திருப்பது அன்னையின் ஆசியே!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...