குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 21, 2023

புராதன ஞானம்

எனது குருநாதரை நாடி வருபவர்களுக்கு தான் தந்த புராதன ஞானத்தைக் கற்பிக்கச் சொன்னதன் படி 2013ம் ஆண்டு சித்திராப் பௌர்ணமியில் ஒரு blogger வகுப்பு ஆரம்பமாகி அதில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்து இந்தப் பணி ஆரம்பமாகியது;
இதே வருடத்தில் Vicknaverny Selvanathan அம்மையார் கேட்டுக்கொண்டதற்கிணங்க கொழும்பில் எனது அலுவலக நேரம் முடிய மாலை ஆறுமணிக்கு சிறு குழுவிற்கு அகத்திய மகரிஷியின் யோக ஞானப்பாடல்கள் விளக்கவுரை வகுப்புகள் ஆரம்பமாகியது. இது இப்போது முழுமையான நூலாக இருக்கிறது. 
அதன் பிறகு அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூல் வெளியாகிய போது முறையான வகுப்புப்புகள் ஆரம்பமாகியது. 
எனினும் நான் எனது பல்தேசியக் கம்பனி தொழில் வாழ்க்கையிலேயே எனது வாழ்வு செல்வதாக எண்ணிக்கொண்டு இந்த வகுப்புகளை முறைப்படுத்தி வளர்ச்சியுறச் செய்யும் ஆர்வம் எதுவும் அற்றவனாகவே இருந்தேன். மாணவர்கள் தொகை அதிகரித்துக் கொண்டு சென்றது. 
அன்னையின் திருவுளப்படி 2020 ம் ஆண்டு சிருஷ்டியாக உருப்பெற்றது. இதன் நோக்கம் நவீன மனதிற்கான புராதன ஞானம்; 
இன்று நான் காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.
கடந்த மூன்று வருடங்கள் அண்ணளவாக 2000 மணி நேர வகுப்புகள் மனம், உடல் தத்துவம், பிராணதத்துவம், மந்திர சாஸ்திரம், பதஞ்சலி யோக சூத்திர விளக்கம், ஹடயோக பிரதீபிகை விளக்கம், சித்தயோகபாட தீக்ஷை, அகத்தியர் யோக ஞானத்திறவுகோல், ஆரோக்கிய ரகசியம், தந்திர சாஸ்திர அறிமுகம் என்ற தலைப்புகளில் கற்பிக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், போர்த்துக்கீசிய மொழிகளில் நடைபெறுகிறது. 
வரணாசியிலிருந்து பெருந்தொகையான ஆயுர்வேத, தந்திர, ஆகம சாஸ்திர நூல்கள் பெறப்பட்டு ஆய்வு நூலகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 
பல உலகத் தரம் வாய்ந்த அறிவியலாளர்கலுடன் இணைந்து இந்தத் துறையில் ஆய்வு ஆலோசனைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
இதன் நோக்கம் நவீன தர்க்க மனதுடன் தடுமாறும் தற்கால மனிதனுக்கு மனம், உடல், பௌதீகம் தாண்டிய ஆற்றல்கள் பற்றிய அறிவினை தனது நாளாந்த வாழ்க்கையை முன்னேற்றி தனது அக வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கான வழிகளை கற்பிப்பதாகும். 
பல நூறு மாணவர்கள் தாம் பயன்பெற்றதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த படியாக பல ஆயிரம் மாணவர்களுக்கு இவை சென்றடைய உழைப்போம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...