குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 28, 2023

செங்கோண்மை

செங்கோல் என்பது தமிழர்கள் எப்படி அதிகாரத்தைக் கையாண்டார்கள் என்பதன் குறியீடாகும். பிரித்தானிய அரசர், மேற்கத்தியே அரச வமிசங்கள் கையில் தாங்கும் Sceptre என்பதன் பொருள் அதிகாரக் கோல் என்பதாகும். ஆனால் தமிழர்கள் இதை இரண்டாகப் பகுத்து அறம் வகுத்திருக்கிறார்கள். 
அதிகாரத்தை ஒருவன் எப்படியும் அடையலாம்; அடைந்த பிறகு அந்த அதிகாரத்தை அடைந்தவன் அப்பியாசிக்கும் முறையில் அது செங்கோன்மையாகவும், கொடுங்கோன்மையாகவும் இருக்க முடியும். 
ஆகவே அதிகாரத்தை அடைந்தவனது அறிவு முதிர்ச்சி, மனப்பண்பு, அறம் என்பவற்றை அவன் சமமான மன நிலையில் அப்பியாசிக்க வேண்டும் என்பது அவனிற்கு அறத்தைப் போதித்த ராஜ குரு நினைவுபடுத்த வழங்கப்படுவது. 
இது தங்கத்தால் ஆக்கப்பட்டிருப்பது அதிகாரத்தைக் கையாள்பவன் தங்கத்தைப் போல் மங்காத பண்புடையவனாக இருக்க வேண்டும் என்பது! 
இந்த செங்கோன்மையைப் பற்றி பத்துக்குறள்களில் வள்ளுவர் கூறுகிறார்; 
கோல் என்பது அதிகாரம்; அது செம்மையான அதிகாரமாக செங்கோலாகவும் இருக்கலாம்; கொடுமையான அதிகாரமாக கொடுங்கோன்மையாகவும் இருக்கலாம். 
வள்ளுவர் முதல் குறளில் செங்கோன்மை என்பது என்ன என்று வரையறுக்கிறார்; 
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. 
எது சரி எது தவறு என்பதை சரியாக ஆராய்ந்து, சம நிலையுடைய மனதுடன் (இறைபுரிந்து என்றால் இறைவன் எல்லா உயிர்களின் மேலும் சம பாவம் உடையவன்(; தான் செய்யும் காரியத்தை செய்பவன் செங்கோன்மை உடையவன்; அதிகாரத்தை அப்பியாசிக்கும் போது கூர்ந்து எது சரி? எது பிழை என்று ஆராயும் பண்பும், பின்னர் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் பக்கச்சார்பு இல்லாமல் சரியானதைச் செய்வது செங்கோன்மை. 
இரண்டாவது குறளில் அதிகாரம் உடையவனிடம் அவனை அண்டியவர்கள் அந்த அதிகாரத்தின் மூலம் எதை எதிர்பார்ப்பார்கள் என்றும் அதிகாரம் உடையவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதும் வள்ளுவர் சொல்லுகிறார். 
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
உலகம் மழை பொழிந்தால்தான் செழுமை உறுவது போல் அதிகாரம் உடைய மன்னவன் தனது அதிகாரத்தை மக்கள் இன்பமாக வாழ பிரயோகிக்க வேண்டும் என்று குடிகளெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பர். 
ஒரு தேசத்தில் அறம் தவறாமல் இருந்தால்தான் அங்கு உயர்ந்த அறிவு உருவாகும். அது அதிகாரம் செம்மையாக இருந்தால் மாத்திரமே நடக்கும்! 
மக்களின் தேவைகளைப் புரிந்து அதிகாரத்தைப் பிரயோகிக்கும் மன்னனின் அடிச்சுவட்டையே மக்கள் பின்பற்றுவர். 
செங்கோன்மையோடு கோலோச்சும் மன்னவனின் இராச்சியத்தில் விளைச்சலும் வளமும் குன்றுவதில்லை; பொருள் வளத்தால் செழிக்கும். 
மன்னவனின் ஆயுதம் கையில் பகைவரை அழிக்கும் வேல் அல்ல! தன் மக்கள் மனதை வெல்லும் செங்கோல்! 
இறையாகிய செங்கோன்மையால் மக்களை அரசன் காத்தால் அரசனை மக்கள் காப்பர்
செங்கோலின் உச்சியில் இருக்கும் இடபம் இறைவனைத் தாங்கும் வாகனம்; இறைவனாகிய சிவபெருமானை சிரசில் தாங்கி அவன் ஆற்றல் உடலில் பரிணமிக்கும் இடபமாகிய புருவமத்தியில் சிவ ஒளி பெருகினால் அத்தகையவனுக்கு வள்ளுவர் கூறும் இறை புரியும் என்ற இறைவனைப் போல் சமபாவத்துடன் இருக்கும் வல்லமை வாய்க்கும்; அறத்துடன் ஆட்சி புரிவேன் என்பது செங்கோல் ஏற்கும் மன்னனது உறுதி மொழி! 
அத்தகைய உறுதி மொழியுடன் ஸ்ரீ விவேகானந்தரும், ஸ்ரீ அரவிந்தரும் கண்ட செங்கோன்மை நிறைந்த உலகத்திற்கு ஞானம் பரப்ப வல்ல பாரத தேசம் உருவாக சங்கல்பம் பூண்கிறாரா பாரதப் பிரதமர்?

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...