குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 26, 2023

அரசியல்

நாம் அரசியல் தலைவர்களை நக்கலடிக்கிறோம், நையாண்டி செய்கிறோம். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் அவர்கள் பெரும்பாலான மக்களின் குணங்களின் பிரதிபலிப்பே!
ஒரு கடத்தல் காரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவனைத் தெரிவு செய்த பெரும்பாலான மக்கள் அவனது கடத்தல் திறனை உள்ளூர இரசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்று அர்த்தம்! 
ஊழல்வாதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் அவனைத் தெரிவு செய்த பெரும்பாலானவர்கள் ஊழலை இரசிக்கிறார்கள் என்று அர்த்தம்! 
இங்கு நடப்பது மக்கள் ஆட்சி! மக்கள் என்ன தரத்தில் இருக்கிறார்களோ அந்த தரத்திலேயே மக்களின் பிரதி நிதிகள் இருப்பார்கள்! 
மக்களின் அகப்பண்பிற்கு ஏற்ற தலைவர்களே மக்களிற்கு வாய்க்கிறார்கள். மாற்றம் வேண்டும் என்றால் நாம் மக்கள் மனம் மாறி, உயர்ந்த இலட்சியமுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும். 
நல்ல விதையும் தீய மண்ணில் இட்டால் நோய் பிடித்த குறழ் தாவரம் வருவது போல் நல்ல எண்ணமுள்ளவன் இப்போதுள்ள அரசியலிற்குள் வந்து இது தான் இயல்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீய அரசியல் பண்பினைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண தேசத்தில் கோவணாண்டி கோமாளி என்ற நிலை உருவாகிவிடும் என்பதை அண்மையில் ஒரு அரசியல்வாதி மிகப்பெரிய ஊழல்வாதிகளுடன் நின்று எடுத்துக்கொண்ட படத்திற்கு தந்த விளக்கத்தைப் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம். 
நாம் ஊழல்வாதிகளை, கடத்தல் காரர்களை உள்ளே ஹீரோவாக இரசிக்கும் விழுமியமுடைய, யதார்த்தமாக ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தில் தான் இருக்கிறோம் என்பதைப் புரியாமல் நக்கல் அடிப்பதும், கேலி பேசுவதும் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது. 
மாற்றம் வரவேண்டியது மக்களின் மனதில்! அது நடந்தால் அந்தப் பண்பிற்குரிய தலைவர்கள் உருவாகுவார்கள். 
அறச்சிந்தனையுடைய எதிர்காலச் சந்ததியை உருவாக்குவதற்கு அதிகமான உழைப்பைச் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...