குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 05, 2021

உலக சுற்றுச் சூழல் தினமும் மரநடுகை எனும் மாயையும்

இன்று உலக சுற்றுச் சூழல் தினம்! மனிதன் தான் சுற்றுச் சூழலிற்கு செய்யும் அநியாயங்களுக்கு ஒர் நாளாவது பாவமன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் எழுந்தவைதான் இந்த "தினங்கள்". 

அதாவது 364 நாட்கள் சூழலை அழிக்கும் வேலை பார்த்துவிட்டு இன்று ஒரு நாள் ஆளுக்கொரு மரத்தை நட்டுவிட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றி குறைந்தது ஒரு வருடமாவது பராமரித்தால்தான் அது வளரும் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் சகட்டு மேனிக்கு இத்தனை ஆயிரம் மரங்கள் நட்டோம் என்று அறிக்கை வருடா வருடம் வருகிறது. இவற்றை எல்லாம் எடுத்துக் கணக்குப் பார்த்தால் இன்று உலகம் காடுகளால் மாத்திரம் தான் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் ஆய்வுத் தகவல்கள் காட்டு நிலங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்று கூறுகிறது. 

மரம் நடுகிறோம் என்று பெரிய பணத்தை வீணாக்கி பிரயோசனம் இல்லாத செயல் செய்யாமல் விதைப்பந்துகளை ஏற்கனவே இருக்கும் காட்டுச் சூழல் தொகுதிக்கு வீசுதல் சிறப்பான செயல்! தகுந்த சூழ்நிலை ஏற்படும்போது விதைகள் உறை நிலையில் இருந்து விழித்து வளரும். 

மனிதன் தற்குறித்தனமான மரநடுகை விழாக்களிலிருந்து வெளிவந்து சூழல் தொகுதி உருவாக்கத்தினைப் பற்றி சிந்திக்க வேண்டும். 

எமது வீட்டைச் சுற்றி இருக்கும் சிறு நிலத்தில் மரங்களும், புற்களும், செடிகளும் நிறைந்த சூழல் தொகுதியை உருவாக்க வேண்டும். எங்கோ இருக்கும் நிலத்திலிருந்து எமக்கு உணவு வருகிறது, பணமிருந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று சிந்திக்காமல் சமூகத்தில் சிறு சிறு குழுக்களாக உணவுக் காடுகள் அமைக்க வேண்டும். 

விவசாயம் இரசாயனத்தை நம்பினால் சூழலிற்கு எதிரி! ஆனால் இயற்கை விவசாயம் என்பது காட்டுச் சூழல் தொகுதியை உருவாக்கும் இன்னுமொரு வழி! 

இப்படி இயற்கை விவசாயத்தினைப் பாவித்து உருவாக்கப்படும் உணவுக்காடுகள் இரண்டு வழியில் பயனுள்ளவையாக இருக்கும். மனிதனிற்கு தேவையான உணவினைத் தரும் அதேவேளை ஒரு சூழல் தொகுதியாக இயங்கி காடு தரும் சூழலியல் நன்மைகளைத் தரும். 

தனி மரத்தை நடுவதால் பெரிதாக எந்த நன்மையும் கிடைப்பதில்லை. ஆனால் அது ஒரு காட்டுச் சூழல் தொகுதியாக இருக்கும் பட்சத்தில் அது ஏழு அல்லது ஐந்து அடுக்குகளுடன் உச்சபட்ச உற்பத்தித் திறனுடன் இயங்கும் சூழல் தொகுதியாக இருக்கும். பெறப்படும் மழையில் அதிக பட்சம் நிலத்தடி நீராக சேமிக்கப்படும். மண்களில் நன்மை தரும் நுண்ணுயிரியும், மண்புழுவும் நிறைந்து நல்ல வளம் பெறும். மனிதன் தனக்குத் தேவையான உணவினைப் பெறும் அதேவேளை சூழல் தன்னைத்தானே முகாமைத்துவம் செய்துகொள்ளும். 

ஆகவே இயற்கை ஆர்வலர்கள் இயற்கையைப் புரிந்து அர்த்தமுள்ள சூழல்தொகுதி ஆக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...