குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 01, 2021

கிருஷ்ணர் கூறும் யோகிக்கான அறிவு

பகவத்கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் 42 வது சுலோகத்தில் கிருஷ்ணன், யோகி systematic ஆக பெற வேண்டிய அறிவினைப் பற்றியும் அதன் hierarchical order பற்றியும் குறிப்புத் தந்துள்ளார். 

ஒரு யோக சாதகன் முதலில் தனது கண், காது, நாக்கு, செவி, தோல் ஆகிய இந்த ஐந்தும் எப்படிச் செயற்பட்டு தனது மனதிற்கு என்ன தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்ற அறிவினைப் பெறவேண்டும். 

யோகம் பயில விரும்புபவனின் முதல் அறிவு தனது புலன்கள் எப்படிச் செயற்படுகிறது என்பது பற்றிய அறிவினைப் பெறவேண்டும். புலன் பற்றிய அறிவு பெற்றபின்னர் அதை விட உயர்ந்த மனம் பற்றிய அறிவினைப் பெறவேண்டும். 

இப்படி புலன்களுக்கும், மனதிற்கும் இருக்கும் தொடர்பினை அறிந்தால் மனதின் மூலம் புலன்களை வெல்ல முடியும். 

பிறகு மனதின் பிடியிலிருந்து மீண்டு வர அதை விட உயரிய புத்தி - விவேகத்தினைப் பற்றி அறிய வேண்டும். புத்தி மூலம் மனதை வெல்ல வேண்டும். 

பிறகு புத்தி எப்படி செயற்படுகிறது என்பதை உணர்ந்து அதை ஆன்மாவின் துணைகொண்டு வெல்ல வேண்டும். 

பிறகு ஆன்மாவினை இறைவன் என்ற பேரான்மாவின் துணைகொண்டு வெல்ல வேண்டும். 

இப்படி யோகி என்பவன்,

1. புலன்கள்

2. மனம்

3. புத்தி 

4. ஆன்மா

5. இறைவன் 

என்ற ஐந்து தளத்தில் தனது புரிதலை வளர்த்து சாதகம் செய்ய வேண்டும். இதுவே பகவத்கீதை காட்டும் யோகத்தின் சாராம்சம். 

புரிதலை வளர்ப்பது என்பது யாரோ எழுதிய புத்தகங்களை வாசித்துவிட்டு கிளிப்பிள்ளை போல் கூறுவதல்ல! தனக்குள் புலன்கள், மனம், அறிவு, ஆன்மா, இறைசக்தி எப்படி செயற்படுகிறது என்ற பிரத்தியட்ச அனுபவத்தை யோகசாதனையால் பெறுவது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...