குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 11, 2021

ஸ்ரீ கிருஷ்ணரும் தொல்காப்பியமும்

தொல்காப்பியர் பொருளதிகாரம் சூத்திரம் 571 இல் அறிவு, மனம், புலன்கள் ஆகியவற்றின் ஒழுங்கு தந்திருக்கிறார். ஐம்புலன்களில் உயிர் பரிணாமம் பெறும் போது தோல், நா, நாசி, கண், செவி என்று ஒன்றை விட ஒன்று உயர்ந்த அறிவை, புரிதலைத் தந்து இறுதியாக மனம் என்பதன் மூலம் பெறும் அறிவைப் பற்றிக் கூறுகிறார். 

தொல்காப்பியர் அறிவு எப்படி உருவாகிறது என்பது பற்றி ஒரு சூத்திரம் தந்துள்ளார். (பொருளதிகாரம், சூத்திரம் 571)

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனமே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே 

தோலினால் உணர்ந்து அறிவது ஓரறிவு

தோலினாலும், நாவினாலும் அறிவது ஈரறிவு

தோல்+ நா+ நாசி மூன்றினாலும் அறிவது மூவறிவு

தோல்+ நா+ நாசி+கண் - நாலறிவு

தோல்+ நா+ நாசி+கண்+செவி = ஐந்தறிவு

தோல்+ நா+ நாசி+கண்+செவி+ மனம் = ஆறறிவு

இதை ஸ்ரீ கிருஷ்ணன் பகவத்கீதையில் மூன்றாவது அத்தியாயம் கர்ம யோகத்தில் அர்ஜுனனுடன் சம்பாஷிக்கிறார். 

குந்தியின் மகனே, 

ஆசை உண்மையறிவை மறைக்கிறது;

ஆசையின் இருப்பிடம் ஐந்து புலன்கள், மனம், அவற்றால் நாம் அடைய சங்கல்பிப்பவை! 

முதலில் புலன்களை வசப்படுத்த வேண்டும்! 

இதன் மூலம் ஆசையை வெல்ல வேண்டும்!

புலன்களை விட மனம் வலிமையுடையது!

மனதை விட புத்தி ஆற்றல் வாய்ந்தது!

புத்தியை விட ஆன்மா ஆற்றல் வாய்ந்தது! 

இப்படி புலன், மனம், புத்தி, ஆன்மா என்ற வகையில் ஒன்றை ஒன்றால் வென்று ஆற்றல் பெறவேண்டும். 

தொல்காப்பியர் சொன்ன சூத்திரத்திற்கு ஆன்மா என்ற ஒன்றையும் சேர்த்து எப்படி ஒன்றால் இன்னொன்றை வென்று உயர் நிலை பெறுவது என்ற புரிதலை நாம் பெறலாம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...