குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 12, 2021

தலைப்பு இல்லை

கிருஷ்ணன் கீதையில் யோகத்திற்கு இரண்டு வரைவிலக்கணங்கள் தருகிறார். 

"யோக கர்மஸு கௌசலம்"

இரண்டாவது அத்தியாயம் - சாங்கிய யோகம், 50 ஸ்லோகம், கடைசி வரி. 

கௌசலம் - என்றால் சரியான மனோபாவத்துடன் - with correct attitude 

இந்த வரியின் அர்த்தம்,

கர்மத்தினை/செயலினை சரியான மனோபாவத்துடன் செய்பவன் யோக நிலையினை அடைபவனாகிறான். 

இந்த முழு ஸ்லோகத்தினதும் பொருள்: புத்தி விழித்தெழப்பெற்றவனுக்கு புண்ணியபாவங்கள் இரண்டும் அற்றுப்போகிறது. இந்த யோக நிலையை அடைவாய் அர்ஜுனா, புத்தி விழிப்புற கர்மங்களை சரியான மனப்பாங்குடன் செய்ய வேண்டும் என்கிறார் யோகீஸ்வரர்! 

சரியான மனப்பாங்குடன் கர்மத்தினை செய்யும்போது மனம் பெறும் தகுதியால் யோகத்தின் இறுதி நிலையான -ஸ்ரீ கிருஷ்ணரின் இரண்டாவது வரைவிலக்கணம் வருகிறது.

ஸமத்வம் யோக உச்யதே 

யோகம் என்பது சமநிலை அடைதல். 

மனம், உணர்ச்சிகள், பிராணன், உடல் மேலும் உடல் ஆக்கப்பட்டிருக்கும் அனைத்து சூக்ஷ்ம தத்துவங்களிலும் சமநிலை அடைதல்; இந்தச் சமநிலையுடன் கர்மத்தைச் செய்தல் "யோக கர்மஸு கௌசலம்" எனப்படும். 

இந்த இரண்டு வரிகளும் யோக சாதகர்களுக்கு ஒளிவிளக்குப் போன்றது! 

பலர் யோகம் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு தகுந்த மனப்பாங்கினை வளர்ப்பதில்லை! மனப்பாங்கு மாறாமல் எவ்வளவு பயிற்சி செய்தாலும் பலன் கிட்டப்போவதில்லை! 

அதுபோல் எல்லாவற்றிலும் மிதமாக - சமமாக இருப்பதும் யோகத்தின் அவசியமான பண்பு! 

இந்த இரண்டு வரைவிலக்கணங்களும் ஒரு யோக சாதகன், 

1) தனது ஒவ்வொரு எண்ணம், செயல் இவற்றில் சரியான மனப்பாங்கும்

2) கர்மம் ஆற்றும் போது உடல், மன, பிராண, உணர்ச்சிகளை சமநிலையில் வைத்திருப்பதும் அவசியம் என்பது பெறப்படுகிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...