குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 22, 2021

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 01: யோகத்தின் வரைவிலக்கணங்கள்

 



சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 01

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.
உங்கள் கருத்துக்கள், கேள்விகள், உரையாடல்களும் இந்தத் தொடரை மேலும் செம்மையாக்கும்! இயலுமான வரை கேள்விகளை பதிவிடலாம்.
முதலாவது கட்டுரை கீழே!
யோகத்தின் வரைவிலக்கணங்கள்
8888888888888888888888888888888888
இன்று யோகா செய்கிறோம் என்றால் ஆசனம் செய்வதையும், பிரணாயாமம் செய்வதையுமே சொல்கிறார்கள்.
யோகம் என்பது இந்திய தத்துவ தர்சனங்களில் மெய்மையை அடைவதற்குரிய செயல்முறை அறிவியல் சார்ந்த ஒன்று! மற்றவற்றை வெறுமனே புத்தியால் தர்க்கத்தால் ஆராய்ந்து உண்மையை அறியும் முறைகளாக இருக்க யோகமோ மனிதனின் மிக ஸ்தூல அடிப்படையான உடலில் இருந்து, பிராணன், மனம், புத்தி, ஆன்மா என்று தன்னுணர்வு மூலம் இறுதி இலக்கான இறைவனைக் காட்டுகிறது.
யோகம் என்பது யுஜ் என்ற சமஸ்கிருத அடிச் சொல்லில் இருந்து வந்ததால் இணைவு என்று பொருள் கொள்ளப்படுகிறது.
யோகம் என்பதன் வரைவிலக்கணப்படுத்த எமக்கு புராதன நூற்களில் வரைவிலக்கணமாக நான்கு கிடைக்கிறது.
முதலாவது ஸ்ரீ இராமருக்கு யோகத்தினை உபதேசித்த வஷிஷ்ட மகரிஷி இப்படி வரைவிலக்கணப்படுத்துகிறார்.
1. “யோக மன ப்ரஸ்மன உபாய”
யோகம் என்பது மனதினை அமைதிப் படுத்துவதற்குரிய உபாயம். யோகத்தின் பெருந் தடங்கல் சலனிக்கும் மனம். சலனத்தைக் குறைக்கும் உத்திகள் யோகம் என்று கருதப்படும்.
அடுத்த இரண்டு வரைவிலக்கணங்கள் யோகீஸ்வரரான ஸ்ரீ கிருஷ்ணனுடையது;
2. "யோக கர்மஸு கௌசலம்"
யோகம் என்பது சரியான மனப்பாங்குடன் கர்மத்தினை செய்தல்! அடிப்படையில் ஒவ்வொரு செயலும் சரியான மனப்பாங்குடன் செய்யப் படவில்லை என்றால் அது மேலதிக மனச் சலனத்திற்கு இட்டுச் செல்லும். செய்யும் செயல் எமது மனதிற்கு அதிக சலனத்தைத் தராதவையாக இருக்க வேண்டும்.
3. ஸமத்வம் யோக உச்யதே
யோகம் என்பது சம நிலை அடைதல். மனம், உணர்ச்சிகள், பிராணன், உடல் மேலும் உடல் ஆக்கப்பட்டிருக்கும் அனைத்து சூக்ஷ்ம தத்துவங்களிலும் சம நிலை அடைதல்;
நான் காவது வரைவிலக்கணம் பிரபலமான ஸ்ரீ பதஞ்சலில் மகரிஷியினுடையது
4. யோக சித்த வ்ருத்தி நிரோதஹ
யோகம் என்பது சித்தத்தின் விருத்தியை நிரோதிப்பது.
இந்த நான்கு அடிப்படையில் யோகம் என்பதைச் சரியாகப் பரிந்துகொள்வது யோகத்தின் முழுமையான பயனைப் பெறுவதற்கு உதவி செய்யும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...