குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 22, 2021

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 02 : குதம்பை சித்தர் கூறும் யோகம்

 




சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 02

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.

தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் குதம்பைச் சித்தரின் ஒரு பாடலில் உள்ள யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;

அட்டாங்கயோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு
முட்டாங்க மேதுக்கடி குதம்பாய்
முட்டாங்க மேதுக்கடி.

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்று அஷ்டாங்க யோகத்தினை பயிற்சித்து தனது சித்த விருத்திகளை அடக்கிய யோகிக்கு முட்டாள்தனமான நம்பிக்கைகள் ஏதுக்கடி குதம்பாய் ஏதுக்கடி.

ஒரு யோகி தனது சாதனையால் தனது சித்தமாகிய ஆழ்மனதை பரிபூரணமாக சுத்தி செய்து இறைவனுடன் ஒன்றக்கூடிய தியான, சமாதி நிலையை அடையப் பயிற்சி செய்பவன் கிரகங்களுக்கு பயந்து, கர்மங்களை விரட்ட வீணான சடங்குகளைச் செய்வது முட்டாங்கம் என்ற முட்டாள்தனம்.

ஸ்ரீ சர்வ ஞானோத்திர ஆகமத்தின் யோக பாதத்தில் சிவபெருமான் முருகப்பெருமானுக்கு யோகத்தினை உபதேசிக்கும் போது கீழ்வரும் உபதேசத்தினைச் செய்கிறார்;

பிராணாயமத்தினால் தோஷங்களை நீக்குக
பிரத்தியாகாரத்தால் தேவையற்ற தொடர்புகளிலிருந்து மனதை நீக்குக
தாரணையால் பாபத்தினை நீக்குக
தியானத்தினால் அநீச்சுவரமான குணங்களை எரிக்குக
என்று கூறுகிறார்.

அட்டாங்க யோகப்பயிற்சி ஒரு சாதகன் தனது உடலிலுள்ள தோஷங்களை நீக்கி, மனதை தேவையற்ற தொடர்புகளில் இருந்து விடுவித்து, சித்தத்தில் ஏற்கனவே சேர்த்த பாபங்களை எரித்து, தீயகுணங்களை எரிக்கும் என்பது பெறப்படுகிறது.
ஆகவே அட்டாங்க யோகத்தில் நிலைபெற்ற யோகி முட்டாங்கமான முட்டாள்தனமானவற்றைச் செய்யத்தேவையில்லை என்கிறார் குதம்பைச் சித்தர்! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...