குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 22, 2021

சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 04: பாம்பாட்டிச் சித்தரின் குண்டலினி யோகம் 02

 



சர்வதேச யோகா தின அறிவுப் பகிர்வு - 04

**************************************
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நாட்களில் தினசரி யோகம் பற்றிய சிறு கட்டுரைகளை பதிவிடலாம் என்று எண்ணம்.

தமிழ்ச் சித்தர்களின் யோகம் வரிசையில் பாம்பாட்டிச் சித்தரின் பாடல்களில் உள்ள குண்டலினி யோகக்கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்;

இந்தப்பாடலில் சிவன், திருமால், பார்வதி ஆகிய தெய்வங்களில் நாகாபரணமாக குண்டலினி இருக்கும் இடங்களும் அது சாதகனுக்கு சொல்லும் குறியீட்டு விளக்கமும் விளங்கப்படுத்தப்படுகிறது.

குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே.

சிவபெருமானிற்கு நாகாபரணம் என்பதும், திருமாலிற்கு ஆதிசேஷன் குடை என்பதும், பார்வதியின் கைவளையல் எல்லாம் நாகாபரணமாக காட்டப்படுவதன் இரகசிய அர்த்தம் குண்டலினி சக்தி எப்படி பிரபஞ்சத்தில் இயங்குகிறது என்பதன் இரகசியமே! ஒவ்வொரு இறைசக்தியை உபாசிப்பதன் மூலம் எம்முள் உறையும் பிராண மகாசக்தியான குண்டலினியை வசப்படுத்தும் ஆற்றலில் குறியீட்டு வடிவம் அந்த தெய்வ சக்திகளின் ஆபரணம் இருக்கும் நிலையைக் கொண்டு விளங்கிக்கொள்ளலாம்!
சிவபெருமானின் கழுத்தில் இருப்பது வாசுகி என்ற பாம்பு! இதுவே தேவர்களும் அசுரர்களும் அம்ருதம் கடைய உதவியது. ஆகவே சிவபெருமானின் அருள் இல்லாமல் எவரும் இடகலை பிங்கலை நாடிகளைக் கடைந்து வாசியை உருவாக்க முடியாது! அப்படி சாதனையினால் உடலில் உருவாகும் விஷத்தைப் போக்க நீலகண்டனாகிய சிவபரம்பொருளின் அருட்பார்வை வேண்டும்!ஆகவே வாசியோகம் – குண்டலினி யோகம் பயில விரும்பும் சாதகன் முதலில் சிவனின் அருள் பெறவேண்டும்.

குண்டலினி விழிப்பால் கிடைக்கும் அம்ருதத்தை சரியாக உடலில் சேர்க்க திருமாலில் அருள் வேண்டும். திருமாலிற்கு ஆதிசேஷன் குடைபிடிக்கிறான் என்பது குண்டலினியால் விளையும் அம்ருதத்தினை காப்பவர் திருமால் என்பதாலாகும்!

குண்டலினி பராசக்தியின் கங்கணமாக இருக்கிறாள். கை மனிதனின் முழுத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய கர்மேந்திரியம். குண்டலியினை முழுமையாக கட்டுப்படுத்த பார்வதியாகிய பராசக்தியின் அருள் முழுமையாக வேண்டும்.

ஆக குண்டலினி சாதனை செய்ய விளையும் சாதகனுக்கு சிவபரம்பொருளன் அருட்பார்வை இன்றி சாதனை செய்யும் தூண்டலே வராது! சாதனையில் வரும் விஷத்தினை நீலகண்டன் அருளினால் வென்று அம்ருதத்தினைப் பெறவேண்டும். இந்த அம்ருதத்தினை உடலில் முறையாகச் சேர்க்க திருமாலின் அருள் வேண்டும். முழுமையாகக் கட்டுப்படுத்த பராசக்தி அருள் வேண்டும்! 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...