குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, June 11, 2019

ஸாவித்ரி யோக காவிய உரையாடல் - 05

ஆதி காண்டம்

முதற்சர்க்கம்

சங்கேத வைகறை 

கீழ்வரும் ஸாவித்ரியின் வரிகள் அருமையானவை, எனக்கு மிகவும் பிடித்தமானவை. நாம் ஒரு செயலை எப்படிச் செய்கிறோம்? துன்பங்களில் இருக்கும் போது திடீரென ஏதாவது ஒரு எண்ணம் தோன்றி அந்த துன்பத்திலிருந்து விழித்தெழுந்து செயல்பட்டு நன்மை செய்ய எது துணைபுரிகிறது இவற்றையெல்லாம் விளக்கி நிற்கிறது. 

அசையாப் பொருளாய் இறுகி நிற்க

அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்

இருட்குகை தன்னில் ஏதோ வொன்று 

உயிர்த்தது; பெயரிலா இயக்கமாய், எண்ணாக் 

கருத்தாய், விடாப்பிடியாய்த் திருப்தியு 

மின்றி யாதோர் இலக்கு மின்றி 

எதோ வொன்று இச்சையுற்றது – எனினும் 

அதன்படி நிற்க வகையறியாமல்

அஞ் ஞானத்தின் துயிலினைக் கலைத்திட

அசேத னத்தினைத் தீண்டியதாமே 

நாம் இருளில், எந்த முயற்சியும் இல்லாமல் துன்பமுறும் போது திடீரனெ ஒரு சலனம், உயிர்ப்புத் தோன்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு திருப்தியற்ற நிலை மனதில் ஏற்பட்டு எமது முயற்சியை ஆரம்பிக்கிறோம். இப்படியான ரஜோ குணத்துடன் கூடிய முயற்சியே அஞ்ஞானத் துயிலினைக் கலைக்கும் சக்தி! 

இந்த வரிகள் துன்பமுற்று இருளில் நிற்கும் போது எமக்குள் ஏற்படும் அகத் தூண்டலை ஏற்று செயல்புரியவேண்டும் என்ற நுண்மையையும் கூறி நிற்கிறது. அதுவே எமது படைப்புக்கு மூலம் என்பதை விளக்குகிறது. 

வாழ்வின் இருளான நேரம் எமது ஒளி மிகுந்த வாழ்க்கைக்கு முன்னரான வைகறைப் பொழுது என்ற உண்மையையும் இந்த வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் கூறி நிற்கிறார். 

நாம் துன்பமுற்றுக் கலங்கி நிற்கிறோம், எங்கிருந்தோ ஒருவர் வருகிறார், எம்முடன் உரையாடுகிறார், நாம் எமது துன்பத்தைக் கூறுகிறோம், அதற்கு அவர் வழிகாட்டுகிறார். அந்த வழிகாட்டல் இறை சக்தி எம்மக்கு ஏற்படுத்தும் உயிர்ப்பு! 

"அந்தக் கணந்தனில் மர்ம மானதோர்

இருட்குகை தன்னில் ஏதோ வொன்று 

உயிர்த்தது;" என்ற வரிகளின் சந்தர்ப்பம்!

அதை பிடித்துக் கொண்டு எமது செயலை தீவிரமாக செய்ய ஆரம்பிக்க ஆரம்ப நிலை இலக்கு அற்றதாகவும், ஆனால் எமது இச்சையினால் அந்த செயல் நடைபெறுவதாகவும் இருக்கும்!

ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது பலரும் அதை எதிர்க்கத்தொடங்குவர், தூற்றுவர்! மனதை நோகடிப்பார்கள்! இவை எல்லாம் எமது செயலுக்கு நல்ல உரமாக்கக் கூடிய இருளின் வலிமைகள்! அவற்றை தூண்டலாக எடுத்துக் கொண்டு முன்னேறுவதே இறைவனின் தூண்டலை நம்மில் செயல்படுத்தும் வழி!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...