குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 28, 2019

மண்புழுவும் மண்ணுக்கு உயிருட்டலும்

மண்புழுவிற்கும் எமக்குமான கலாச்சாரத் தொடர்பு பல நூற்றாண்டுக்கானது. 
திருவாசகத்தில் மாணிக்க வாசகர் "எறும்பிடை நாங்கூழெனப்புலனா லரிப்புண்டு" என்கிறார். 
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடிய மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் மண்புழுவின் பெருமையை இப்படிக்கூறுகிறார். 
"ஓகோ நாங்கூழ்ப் புழுவே யுன்பாடு
ஓவாப் பாடே உணர்வேன்! உணர்வேன்
உழைப்போ ருழைபி ழுலுவோர் தொழின்மிகும்
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்து நீ
எம்மண்ணாயினும் நன் மண்ணாக்குபவை
விடுத்தனை யிதற்கா, எடுத்தவுன் யாக்கை
உழுதுழுது உண்டு மண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந்தும் புகழ் வேண்டார் போல்.
என்கிறார்! மண்புழு என்றே எங்கள் முன்னோர் சொல்லவில்லை, நாங்கூழ்ப் புழு என்றார்கள். நன்கு உழும் புழு என்பதன் மருவலாகத் தான் இது இருக்க வேண்டும்! 
இது மண்ணை உழுதால் உழுவோர்க்கு தொழில் மிகும், பெருகும் என்கிறார் பாடலில்! உழுவோருக்கு எல்லாம் அரசனாக அவர்களின் உழுதலையெல்லாம் பயன் பெறச் செய்யும் அரசன் நாங்கூழ்ப் புழு! 
எந்த மண்ணிலும் இந்த மண்புழு இருந்தாலும் அந்த மண்ணை நல்ல மண்ணாக்கும் ஆற்றல் உள்ளவை! 
இந்தப் பாடலில் கடைசி வரிகளில் எவ்வளவு கஷ்டப்பட்டு மண்ணைப் பண்படுத்தி உழைத்தாலும் அதன் உழைப்பு கண்களிற்குத் தெரிவதில்லை! அதனால் மண்புழுவிற்கு எந்தப் புகழும் கிடைப்பதில்லை!
இன்று விவசாயம் மண்புழுவை மறந்ததால் மண் இறந்து விட்டது! மண் இறந்தால் பயிர் விளையாது!
மண்ணிற்கு உயிர் கிடைப்பது என்பது அதில் மண்புழு இருப்பது! மண்புழு இருக்கும் மண் நலமான மண்! வளமான மண் என்று இன்று நவீன விவசாயம் சொல்வது மணிச் சத்து, சாம்பல் சத்து, தழைச் சத்து எல்லாம் இருந்தால் தாவரம் வளர்ந்து விடும் என்று போதிக்கிறது. தாவரம் வளர்ந்தாலும் நலமாக இருக்குமா என்றால் இல்லை! நோயுள்ள சொத்தைத் தாவரமாக மருந்து குடிக்கும் நோயாளி போல் நஞ்சான பூச்சிமருந்து அடித்துக் காப்பாற்ற வேண்டிய தாவரமாகவே இருக்கும்! 
நலமான நஞ்சில்லாத விவசாயம் வளர வேண்டுமென்றால் மண்ணில் மண்புழு சுதந்திரமாக உழுது வாழ வேண்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...