குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 15, 2019

சிங்காரச் சென்னையும் தண்ணீர் தட்டுப்பாடும்

சென்னை, தண்ணீர் பிரச்சனையின் உச்சத்தில் இருக்கிறது. பலர் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்கிறார்கள்! மழைப் பெய்தாலும் பிரச்சனை தீராது என்பது தான் சூழலியல் அறிவியல் உண்மை!

இன்னும் சிலர் மோடியின் சதி என்றும், இலுமினாட்டிகளின் வேலை என்றும் இரண்டொரு நாட்களில் அறிக்கை விடக் கூடும்!    

ஆனால் உண்மை நிலை, 

நிலத்திற்கு வரும் மழை நிலத்திற்குள் செல்லுமாறு மண்ணின் அமைப்பு இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்!! 

அப்படி இல்லாமல் மண் இறுகியோ, தாவரங்கள் இல்லாமலோ, கொங்கிரீட்டால் நிரப்பப் பட்டிருந்தால் மழை நீர் நிலத்திற்குள் செல்லாமல் வெள்ளம் ஏற்படும். 

ஒரு நகரத்தின் நீர்வளம் அதிலிருக்கும் ஈர நிலங்களின் (wetland) அளவிலும், நிலத்தை மூடியிருக்கும் தாவரத்தின் அளவிலும் தங்கியிருக்கிறது. இந்த இரண்டும் சென்னையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ அற்றுப் போய் விட்டது என்பதே உண்மை! 

இனிச் சென்னையில் நிலப் பாவனை பற்றிய  ஆய்வுத் தகவல் ஒன்றினை மட்டும் பார்ப்போம். 

(Vidhya Lakshmi & Thomas,MAPPING OF LAND USE AND LAND COVER CHANGES IN CHENNAI USING GIS AND REMOTE SENSING, International Journal of Pure and Applied Mathematics, Volume 119 No. 17 2018, 11-21)

2000 - 2017ம் ஆண்டிற்குட்பட்ட 17 வருடங்களில் மாத்திரம்; 

89.64% ஆழ் நீர் நிலைகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப்பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

52% மேற்பரப்பு நீர் நிலைகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப்பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

41.4% ஏரிகள் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது.

13.5% விவசாய நிலங்கள் கட்டிமாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

40% கடற்கரை நிலம் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

59% அடர்வனம் கட்டிடங்களாக அல்லது வேறு நிலப் பாவனைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் மொத்தமாக சென்னை 73% கட்டிடங்கள் அல்லது கொங்கிரீட் வனமாக 2000 - 17க்கு உட்பட்ட 17 வருடங்களில் நிலப் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இப்படி கொங்கிரீட் வனமாக உள்ள ஒரு நிலப் பகுதியில் நிலத்தடி நீர் சேகரிப்பு நடக்காது! மழை பெய்தால் சீரான வடிகாலமைப்பு இல்லை என்றால் பெருவெள்ளம் ஏற்படும் நிலம் தான் இருக்கும்! 

இனி அருகிலிருக்கும் கடல் நீரை சுத்திகரித்து பாவனைக்கு எடுத்தாலே அன்றி நிலத்தடி நீர் சென்னைக்கு கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...