குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 07, 2019

தலைப்பு இல்லை

ஒரு அன்பர் கீழ்வரும் கேள்வியை கேட்டிருந்தார்.
"ஏன் மாயையில் சிக்கி உழன்று மீண்டும் ஏன் பூரணநிலை அடைய பல பிறப்புகளின் வழி முயற்சி செய்து கொண்டே இருக்கிறது என்ன அமைப்பு...பரமாத்மா என்ற ப்ரமம் விருப்பப்பட்டு மாயையில் சிக்கி பிரபஞ்சத்தை படைத்தது...ஆனால் ஜூவாத்மாவின் அனைத்து பிறப்பின் நோக்கம் மாயையை கலைவதே?? ஏன் இவ்வாறு?"
இந்தக் கேள்விக்கும் காயத்ரி சாதனைக்கும் தொடர்பு இருக்கிறது. உலகின் படைப்பு காரிருளில் இருந்து தொடங்குகிறது என்கிறார் ஸ்ரீ அரவிந்தர், ஆனால் இந்த இருளுக்குள் பரம்பொருள் ஒளியாக மறைந்திருக்கிறது. இந்த ஒளிதான் ஆன்மாவின் இலட்சியம். இதை குரு நாதர் அகத்திய மாமகரிஷி "புருவமையத்தொளி கண்டாலதுவே போதும்" என்று அகத்தியர் யோக ஞானத்திறவுகோலில் கூறுகிறார். 
இந்த ஒளியை நோக்கி இருக்கும் பயணம் தான் உண்மையான பயணம். மற்றவை மாயை எனும் இருளில் சிக்கிய பயணம். இருளை விலக்க ஒளியை இலக்காகக் கொள்ள வேண்டும். இப்படி ஒளியை அடையும் இலக்கை நிர்ணயித்துக் கொண்ட ஆன்மாவின் செயல்கள் யாவும் சரியான செயல்களாக (Righteous action) இருக்கும். 
இப்படி சரியான செயல்களைச் செய்வதற்கு அந்த பரம்பொருளின் ஒளியை எமது மனதில் இருத்த வேண்டும். அப்படி அந்த ஒளி மனதில் இருத்தப்பட்டால் மனம் சரியான செயலில் செலுத்தப்படும்! 
ஒரு நடுக்கடலில் இருக்கும் கப்பல் எங்கு செல்வது என்று தெரியாது. அதன் இலக்கு கரை, அந்த கரையைக் காட்டுவது வெளிச்ச வீடு. அது போல் மாயை எனும் கடலில் சுழலும் ஆன்மா பரம்பொருளின் ஒளியைக் கண்டு விட்டால் தனது சுக்கானை அதை நோக்கித் திருப்பி விடும். 
இதற்காகத் தான் காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்பட்டது. காயத்ரி மந்திரத்தின் பொருள் புத்தியை தூண்டும் பேரோளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக! 
காயத்ரி சாதனை மூன்று செயல்களை சாதகனில் செய்விக்கிறது. 
1. கடலில் தத்தளிக்கும் கப்பலிற்கு வெளிச்சவீட்டை காட்டுவது போல் மாயையில் சிக்கி தவிக்கும் மனதிற்கு ஒளியைக் காட்டுகிறது. 
2. அந்த ஒளி எது சரி எது பிழை என்று பகுத்தறியும் புத்தியைத் தூண்ட வேண்டும் என்று மனதிற்கு ஆணையிட்டு மனதை புத்தியின் ஆணைக்கு கீழ் கொண்டு வருகிறது. 
3. அந்த பரம்பொருளின் ஒளியை எம்மில் இருத்தி அதுவாகச் செய்கிறது (தியானிப்போமாக - தீமஹி)
ஆகவே காயத்ரி சாதனை செய்யும் ஒருவன் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுக்கானாகிய மனத்தை அந்தப் பரம்பொருளின் ஒளியை நோக்கித் திருப்பி விட்டு, மனதை புத்தியின் ஆளுமையின் கீழ் கொண்டு வருகிறது.
எனவே குரு முகமாக காயத்ரி சாதனை தொடங்கும் எவரும் சில நாட்களில் தமது மனப் பண்புகளில் நல்ல மாற்றம் காண்பார்கள்!
எனவே தான் உலக மாயையில் சிக்கி தமது பயணத்தின் இலக்கினை தவறவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக காயத்ரி மந்திரம் உண்மையை அறிய விரும்பும் எல்லோருக்கும் நித்திய கடமையாக்கப்பட்டது. 
ஆகவே ஜீவான்மாவின் கடமை மாயைக் கலைவது அல்ல, மாயை ஒரு கடல் என்றால் அந்த கடலில் உடல் எனும் காயக் கப்பல் ஏறி மனம் எனும் சுக்கான் பிடித்து, புத்தி எனும் திசை காட்டியின் உதவியுடன் கலங்கரை விளக்கு எனும் ஒளியை அடைதல். 
இதைச் செய்வது தான் குரு காயத்ரி சாதனை.
காயத்ரி சாதனை செய்யச் செய்ய மனம் நல்ல எண்ணத்தினை பெறுவதற்கான தூண்டலைப் பெறும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...