குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 23, 2019

ஸ்ரீ அரவிந்தரின் துர்க்கா ஸ்துதி

ஸ்ரீ அரவிந்தர் இந்திய தேசத்தை பண்டைக் காலத்தில் உபநிஷத்துகளும், வேதங்களும் காட்டிய வாழ்வின் உயர் இலட்சியங்களை அடைய விரும்பும் ஒரு இலட்சிய ஆன்ம பூமியாக இருந்த நிலையை மீண்டும் பெறவேண்டும் என்று சங்கல்பித்திருந்தார்!

ஏன் இந்தியா ஆன்மீக இலட்சியத்தில் பண்டைக் காலத்தில் அடைந்திருந்த உயர் நிலை மீண்டும் பெறவேண்டும் என்பதற்கு அவரது இலக்கு தனது நாடு என்ற சுயநல எண்ணம் காரணமல்ல. ஒரு வலுப் பெற்ற தேசம் உலகில் அமையும் போது அதன் கலாச்சாரம் மனித குலத்திற்கு அடிப்படையாக அமையும்! அறிவியலை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்தேய நாடுகள் வலுவாக அமைந்ததால் உலகம் மேற்கத்தேய கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் மோகம் கொண்டது. இது மனித குலத்தை துன்பத்தில் ஆழ்த்தும் இருளையே அதிகரித்தது. ஆன்ம உயர்வை வழிகாட்டும் இந்திய கலாச்சாரம் உலகின் கலாச்சாரமானால் உலகம் இன்ப மயமாகும் என்பது அவரது எண்ணம்!

இதற்காக அவர் துர்க்கை சக்தியை இளைஞர்களில் ஆவாஹனம் செய்தார்! துர்க்கை என்றால் துன்பத்தை எதிர்க் கொண்டு வெற்றி பெறுபவள் என்று அர்த்தம்! 

இன்று பலருக்கு துன்பத்தை எதிர்க் கொள்ளும் ஆற்றல் விழிப்படைவதில்லை! சிறு துயரம் வந்தவுடன் துவண்டு மன விரக்தி அடையும் சமூகத்திலேயே நாம் வாழ்கிறோம். 

துர்க்கா என்றால் தாக்கப்பட முடியாதவள் என்று அர்த்தம், எந்த துன்பத்தாலும் தாக்கப்பட முடியாதவள் என்று பொருள்.

துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் போராடி வெற்றி காணும் இத்தகைய சக்தி ஒவ்வொரு இளைஞர்களிலும் உருவாக வேண்டும் என்று ஸ்ரீ அரவிந்தர் பாவனை செய்தார்! 

இந்தப் பாடல் பெங்காலி மொழியில் எழுதப்பட்டது! 

முதலாவது பாடல், 

துர்க்கை அன்னையே! சிம்மவாகினி, ஆற்றல் அனைத்தும் அளிப்பவளே! அன்னையே! சிவனின் அன்பிற்குரியவளே! உன் சக்திக் கூறுகளிலிருந்து பிறந்த இந்திய இளைஞர்களகிய நாங்கள் இங்கு உன் கோயிலில் அமர்ந்து வேண்டுகிறோம்! எங்களைச் செவிமடுபாயாக! இவ் இந்திய மண்ணில் உன்னை வெளிப்படுத்துவயாக! 


இரண்டாவது பாடல்,

துர்க்கை அன்னையே, யுகம் யுகமாக ஒவ்வொரு பிறப்பிலும் மனித உடல் எடுத்து உன் பணி ஆற்றி, ஆனந்தத்தின் உறைவிடத்துக்குத் திரும்புகிறோம். இப் பிறப்பிலும் உன் பணி ஆற்றவே உறுதி கொள்கிறோம். எங்களைச் செவிமடுப்பாயாக, அன்னையே, புவியில் தோன்றி எங்களுக்கு உதவுவாயாக!


மூன்றாவது பாடல், 

சிம்மவாகனமு உடையவளே, திரிசூலம் ஏந்தியவளே! கவசம்பூண்டவளே, அழகிய உடலைக் கொண்டவளே! தாயே வெற்றி தருபவளே! இந்தியா உனக்காக காத்திருக்கிறது, உன் மங்கள உருவத்தைக் காண ஆவலாய் இருக்கிறது, செவிமடுப்பாயாக! இவ் இந்தியமண்ணில் உன்னை வெளிப்படுத்துவாயாக!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...