குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 20, 2019

மூளை - தியானம் - பதஞ்சலியோக சூத்திரம்

இன்று காலை வாசிப்பு The practical neuroscience of Buddha's Brain என்ற நூல். 

இந்த நூல் எப்படி தியானப்பயிற்சிகள் மூளையை மாற்றுகிறது என்பது பற்றி நவீன மருத்துவ அறிவிலான f-MRI தொழில் நுட்பத்தின் தரவுகளுடன் உரையாடுகிறது. 

இதில் சுருக்கமாக புரிந்து கொண்டது, 

மனம், மூளை இரண்டும் ஒன்றிணைந்த ஒரு தனித்த தொகுதி (mind and brain are a single, integrated system). 

மனதின் மூலம் மூளையின் பாகங்கள் மாறுதலடையும், அதுபோல் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் மன நிலையைப் பாதிக்கும் என்பது!

இனித் தியானம் என்பதன் அர்த்தத்திற்கு வருவோம். தியானம் என்பதை தமது மனம்போன போக்கிற்கு வரைவிலக்கணம் செய்ய இயலாது. எமக்கு முன்னர் இதைப் பயிற்சித்து பலன் கண்ட ஆப்த வாக்கியப்பிரமாணத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். 

இப்படி எடுத்துக் கொண்டால் சிறந்து சுருக்க வரைவிலக்கணம் உள்ள நூல் பதஞ்சலியாரின் யோக சூத்திரம். 

யோகசூத்திரத்தின் விபூதி பாதம் 03வது சூத்திரம் தியானத்தை வரையறுக்கிறது. 

तत्र प्रत्ययैकतानता ध्यानम्॥२॥

tatra pratyayaika-tānatā dhyānam ||2||

தியானம் என்பது எங்கு மனம் ஒருமைப்படுத்தப்பட்டதோ அதன் மீதான தொடர்ச்சியான இடைவெளியற்ற எண்ணஓட்டம். 

ஒரு பொருளைப் பற்றி தியானம் செய்கிறோம் என்றால் அதன் மீது மனதைச் செலுத்தி இடையூறாத எண்ணத்தை தைலதாரை போல் செலுத்திக் கொண்டிருத்தல் தியானம். 

இந்த விளக்கம் சரியாகப்புரிந்தால் கண்களை மூடிக்கொண்டு இருப்பதை தியானம் என்று நாம் கருதமாட்டோம். 

இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே எமது பூஜைப்பத்ததிகள். இதுபற்றி வேறு ஒரு நேரம் உரையாடுவோம். இப்போது தியானம் செய்யும் போது நவீன அறிவியலின் கூற்றுடன் ஒப்பிடுவதே எமது நோக்கம். 

நவீன அறிவியல் தொடர்ச்சியான நல்ல எண்ண ஓட்டம் மூளையின் பாகங்களை புத்துணர்ச்சி செய்ய வைக்கிறது என்பதை நிறுவியுள்ளது. 

பதஞ்சலியாரும் தியானத்திற்கான வரைவிலக்கணமும் தியானிக்கும் பொருள் மீதான தொடர்ச்சியான இடைவெளியற்ற எண்ண ஓட்டமே தியானம் என்கிறார். 

ஆகவே சரியாக புரிந்து கொண்டு நல்ல எண்ணத்தை உருவாக்கக்கூடிய, நல்ல உணர்ச்சியை உருவாக்கக் கூடிய தியானம் மூளையை புத்துணர்ச்சி செய்ய வைத்து புதுப்பிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...