குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 11, 2019

மாணிக்கவாசகரின் சம்போகத்திலிருந்து சமாதிக்கு - 07

இனி நான்காவது பாடல்

திகழத் திகழும் அடியும் முடியும்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்

அகழப் பறந்துங் காண மாட்டா

அம்மான் இம்மா நிலமுழுதும்

நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்

டாவா என்ற நீர்மை யெல்லாம்

புகழப் பெறுவ தென்று கொல்லோ

என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

மாணிக்கவாசகர் தனது மிகவுயர்ந்த யோக அனுபவத்தையே புணர்ச்சிப்பத்தில் பாடியுள்ளார். அதிலும் ஒரு சாதகன் தனது கீழ்ச் சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம் ஆகிய மூன்றின் பிடிகளில் சிக்கி புருவமத்தியில் இருக்கும் சிவத்தை அடைய முடியாமல் போய்விடக்கூடிய சாத்தியங்களை எல்லாம் கூறியுள்ளார். 

இந்த நான்காவது பாடல் சுவையானது, இன்று இறையை அடைதல் என்றவுடன் முதல் நிலையில் கோயிலிற்கு சென்று தம்மை வெளி வேடங்களால் பக்திமானாக காட்டிக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். பின்னர் முன்னோர்கள் கூறிய நூற்களை ஆழ்ந்து கற்று தம்மை அறிவாளி ஆக்கி இறைவனைப் பற்றி தெரிந்தவர்களாக முன்னிறுத்துகின்றனர். இதற்கு மேல் ஒரு படி போய் தமது மனதின் கற்பனை ஆற்றலால் இறைவனைக் கண்டோம், உணர்ந்தோம் என்று உணர்ச்சிவசப்பட்டு இறை அருள் பெற்றவர்களாக நிறுவ முயல்கின்றனர். 

இவை எல்லாம் ஆன்ம முன்னேற்றத்தின் படிகள் என்பதில் எந்த ஐயமுமில்லை, ஆனால் இறுதி நிலை இல்லை. 

அறிவால் இறைவனைக் காண்பது மகாவிஷ்ணு அடியைக்காண வராகமாக புறப்பட்டது போன்றது. மனதின் படைப்பு ஆற்றலால் இறைவனைக்காண முனைவது பிராமா அன்னமாக மாறி முடியைக் காண விளைந்தது போன்றது. 

இந்த இரண்டும் சிவத்தை அறியமுடியாத வழி, இதையே 

திகழத் திகழும் அடியும் முடியும்

காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்

அகழப் பறந்துங் காண மாட்டா

என்ற வரிகளால் கூறுகிறார். 

இப்படி அறியமுடியாத சிவம் (அம்மான்) இம்மா நிலம் முழுவதும் நிகழப் பணிகொண்டு என்னை ஆட்கொண்டான் என்கிறார். அகத்தியர் பெருமானார் தனது ஞானம் முப்பதில் "பூசையென்ன மாநிலமே பூசையாகும், புருவமையத்தொளிகண்டா லதுவே போதும்" என்கிறார். இந்த வரிகள் மாணிக்கவாசகரின் அடுத்த வரிகளுடன் ஒப்பிடக்கூடியவை. மாணிக்கவாசகர் தனது அமைச்சர் பதவியை விட்டு விலகி சிவத்தை அடைய நோக்கம் கொண்டவர், அப்படிப்பட்ட ஒருவர் இந்த பெரிய உலகம் முழுவதும் விளங்க என்னை ஆட்கொண்ட என்று வெளியுலகப் புகழுக்கு சிவன் எனக்கு அருளினான் என்று பாடுவாரா? ஆகவே கீழே உள்ள வரிகள் அகமுகமாக பொருள் கோடல் செய்ய வேண்டியவை.

அம்மான் இம்மா நிலமுழுதும்

நிகழப் பணிகொண் டென்னை ஆட்கொண்

டாவா என்ற 

என்கிறார். 

இங்கு மாநிலம் என்பது உடலைக் குறிக்கிறது, தனது யோக சாதனையால் கீழ்ச் சக்கரங்களின் இயக்கங்களை வென்ற யோகி தனது உடலில் சிவ உணர்வு அல்லது விழிப்புணர்வு அல்லது துரியம் என்ற நிலையைப் பெறுகிறான். அது புருவமத்தியில் உணவினை இருத்தி சித்தி பெற்ற யோகிக்கே வாய்க்கும். இந்த நிலை பெறுவதற்கு புருவமத்தியில் ஜோதி வடிவான பொல்லா மணியைப் புணர வேண்டும் என்று பாடலை முடிக்கிறார் .

அடுத்த வரிகளில் வரும் நீர்மை எல்லாம் என்ற வரிகள் யோகத்தில் ஒருவனுக்கு ஏற்படும் குணமாற்றங்களைக் குறிக்கிறது. யோகி தனது உணர்வை சிவத்தில் இருத்தி சாதனை புரிந்து விழிப்புணர்வினைப் பெற தனது குணங்கள் தெய்வ குணங்களாக மாறுவதைக் காண்பான். இந்தக்குண மாற்றத்தினால் உலகம் அவனை வியந்து போற்றும். இவையெல்லாம் புருவமத்தியில் உள்ள பொல்லா மணியைப் புணர்வதால் வரும் நிலை என்கிறார் பெருமானர். 

நீர்மை யெல்லாம்

புகழப் பெறுவ தென்று கொல்லோ

என்பொல் லாமணி யைப்பு ணர்ந்தே.

இந்தப் பாடலின் யோக விளக்கம் ஒருவன் தனது அறிவின் ஆற்றலாலும், மனதின் ஆற்றலாலும் சிவத்தை அறிய முடியாது, மாநிலம் எனும் உடலின் புருவமத்தியில் சிவத்தை அறிந்து, அந்த அனுபவத்தால் சாதகன் தெய்வ குண மாற்றம் பெறுவான் என்பதைக் குறிக்கிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...