குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 24, 2019

ரிஷி சிந்தனை - 01




மனித சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் அடைய வேண்டும் என்பதற்காக பண்டைய ரிஷிகளின் ஞானத்தை எளிமைப்படுத்தி வழங்கியவரே பண்டிட் ராம்சர்மா ஆச்சார்யா.  அவரது சிந்தனைகளை வாசகர்களின் சிந்தனைக்கு ஒவ்வொரு வாரமும் வழங்க குருவருள் கூடியுள்ளது.

மனிதன் செய்யும் செயல்களையும், ஒட்டுமொத்த சமூகமாக இயங்கும் நிலையையும் உற்று நோக்கினால், அவை அந்த மனிதர்களிலும் சமூகத்தினதும் மனங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் வெளிப்பாடாகவே இருக்கும்.

நம்பிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களும் அவர்களின் மனதில் அல்லது ஆழ்மனத்தில் உத்வேகங்களாக உருப்பெறுகின்றன. உருப்பெற்ற அந்த உத்வேகம், பின்னர் விருப்பமாக மாறி செயலுக்கு வருகிறது.

ஒரு மனிதன் தான் காணும் அல்லது செய்யும் செயல்கள் யாவற்றையும்,  தனது மனத்தில் பதிப்பிக்கப்பட்ட ஆழ்மன நம்பிக்கைகள் மூலமாகவே காண்கிறான். பலவித வாழ்க்கை முறைகளையும், பலவித செயல்களையும் உடைய வித்தியாசமான மனிதர்களை நாம் சமூகத்தில் காண்கிறோம்.
இவை அவர்களின் ஆழ்மன உணர்வில் ஆழமாக பதிப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளின் விளைவுகளே! ஒருவனின் நல்லொழுக்கங்களும் அவனது மதிப்பீடுகளும் சமூகத்தில் அவனது செயல்களை கட்டுப்படுத்துகின்றன.

தத்துவவாதி செயிண்ட் எமர் சன் அவர்கள், ”எதிர்காலத்தில் உலகில் போர்கள் இல்லாமல் போய்விடும்” எனக்குறிப்பிடுகிறார். ஏனெனில் போர்களுக்கான காரணம் மக்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கும் எதிரி, எதிர்ப்புணர்ச்சியுடன் கூடிய கொந்தளிப்பு, சண்டை, வெற்றி என்ற ஆழ்மன எண்ணங்களுடன் தொடர்பு பட்டுள்ளது.


இவை தற்போதைய உலக சமாதானம், உலக மதம், நாம் அனைவரும் உலகின் பிரஜைகள் என்ற கொள்கைகள் மூலம் மீள் நிரப்பப்படும்போது போர் புரியும் எண்ணம் அகற்றப்படும்.

உலகமே ஒரு குடும்பமாக எண்ணும் எண்ணம் வளரும். இந்த எண்ணம் வளரும்போது மக்கள் அனைவரும் சுய நலமற்று மனித குலத்திற்கு சேவை செய்யும் நிலைக்கு உயர்வார்கள். எனவே எதிரிகள் இல்லாமல் போய் அனைவரும் மற்றவர்களுக்கு உதவும் மனநிலைக்கு மாறுவார்கள். 

இத்தகைய மாற்றம் மனிதகுலத்தில் நிச்சயம் நடைபெறக்கூடிய ஒன்றே!. உலகில் உள்ள புத்திஜீவிகள் அவர்களது நேர்மையான முயற்சியால் உலகில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். ஒரு மனிதன் நம்பும் தத்துவமும், வாழ்வின் மீதான பெறுமதியின் மாற்றமும் அந்த மனிதனின் இயல்பை மாற்றும். இப்படி மனிதனின் இயல்பு மாற்றம் பெற்றால் உலகின் சண்டைகள், சச்சரவுகள் முடிவுக்கு வரும்.

இந்த அனுமானம் வெறும் கற்பனையல்ல! ஒரு ஆழமான உண்மை! எதிர்காலத்தில் ஆழமான எண்ணங்களே புதிய உலகை உருவாக்கப்போகின்றன.

எண்ணப்புரட்சியின் புயல் பலமாக வீசும். இந்த எண்ணப்புரட்சி மூலம், சமூகத்தில் காணப்படும் தாழ்மை உணர்ச்சிகள், பிறழ்ச்சிகள் காற்றில் வீசியெறியப்படும் வைக்கோல் போல் எறியப்படும்.
புதிய எண்ணங்கள் புதிய சமுதாயத்தையும் புதிய மனிதர்களையும் கட்டி எழுப்பும். அவை புதிய சம்பிரதாயங்களை உருவாக்கி புதிய செயல்களை வெளிப்படுத்தும்.

அது எவ்வாறு நடைபெறும் என்பதை அடுத்த வாரம் காண்போம்!
(தொடரும்….)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...