குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 17, 2019

பஞ்சகோஷமும் பஞ்சமுக காயத்ரியும்

இது ஒரு சித்தரியல் தத்துவப் பதிவு!

நேற்று பஞ்சகோசங்கள் பற்றி ஒரு உரையாடல். 

கோஷம் என்ற சமஸ்க்ருத (कोश - kośa) வார்த்தைக்கு உயிரைச் சூழ உள்ள ஒரு போர்வை என்று பலரும் நம்பிக்கொண்டும் நம்பவைக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இதில் உண்மை இருந்தாலும் இந்த பஞ்ச கோசம் என்பது அனைவரிலும் இருப்பதில்லை என்பது மற்றொரு உண்மை! 

கோஷம் என்றால் செல்வம் நிறைந்த கருவூலம், செல்வமும் கருவூலமும் உழைப்பில்லாதவனிடம் இருப்பதில்லை! இதைப் போல் தனது உடலையும், உயிர் சக்தியையும் உழைத்து சேமிக்காதவனிடம் பஞ்சகோசங்கள் உருவாவதில்லை! 

பஞ்சகோஷங்களில் நோய் ஏற்படுவது என்று கூறுவது தவறானது! 

உண்ணும் உணவு பிராணனின் ஆற்றலைக் கொண்டு சப்ததாதுக்களாக மாற்றப்படுகிறது. 

இப்படி சப்த தாதுக்களாக மாற்றப்பட்டதில் சுக்கிலதாது வீணாகாமல் (இதன் அர்த்தம் வலிந்து சுக்கிலத்தை அடக்குவதல்ல) இருக்கும் ஒருவனில் அவனது எண்ணங்கள் உயர்வான சிந்தனையில் இருக்குமானால் (உயர்வான சிந்தனை என்பது அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், மனப் பதட்டம் போன்றவை இல்லாமல் தன்னை உயர்த்த வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணங்கள், பரமார்த்திகம் அடைய வேண்டும் என்ற ஊர்த்துவ எண்ணம்) அது ஓஜஸ் எனும் உயர்ந்த ஆற்றலாக மாற்றப்பட்டு மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் எனும் அந்தக் கரணங்களிற்கு செலுத்தப்படும். 

இந்த அதிகரித்த ஓஜஸ் சக்தி உடலில் சேமிக்கப்படும் போது அன்னமய கோசமும், தசப் பிராணன்களில் சேர்க்கப்படும் போது பிராணமய கோசமும், மனதில் சேர்க்கப்படும் போது மனோமய கோசமும் புத்தியில் சேர்க்கப்படும் போது விஞ்ஞான மயகோசமும், உயிரைச் சூழ சேர்க்கப்படும் போது ஆனந்தமய கோசமும் உருவாகிறது. 

ஆக கோசங்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு சாதகனில் அவனது நெறிப்பட்ட வாழ்க்கையால் உருவாக்கப்படுபவையே அன்றி எல்லோருக்கும் இருக்கும் ஒரு விஷயம் அல்ல! 

இதை எப்படி சாதிப்பது என்பதே யோக சாதனையின் முதல் படி, அதனாலேயே சாதகன் பஞ்சமுக காயத்ரி முதலில் உபாசிக்க வேண்டியிருக்கிறது! 

ஒருவன் நோயாளி என்றால் அவனில் அன்னமய கோசம் என்ற பேச்சிற்கே இடமில்லை! அல்லது அவனது அன்னமய கோசம் பழுதாகவும் மற்றைய கோசங்களில் உயர்வாகவும் இருக்கலாம்! 

ஆகவே யோகம் கற்பவர்களும், கற்பிப்பவர்களும், சித்த ஆயுர்வேத வைத்தியர்களும் சரியாக இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...