குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, May 28, 2019

ரிஷி சிந்தனை - 05



காயத்ரி சாதனை மிக உயர்ந்த ஆன்ம பலத்தை வளர்க்கக் கூடிய ஆன்மீக பயிற்சி.

சிலர் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் பயிற்சி பெறுகிறார்கள். போட்டியிலும் கலந்து கொள்கிறார்கள். சந்தர்ப்ப வசத்தால் வெற்றி பெற முடியவில்லி. தோல்வியுறலாம், இப்படி தோல்வியுற்றதால் அவர்கள் பெற்ற பயிற்சி வீணாவதில்லை. அவர் பெற்ற உடல் வலிமை இழக்கப்படுவதில்லை. அந்த வலிமை அவரிற்கு வாழ் நாள் முழுவதும் துணை புரியும்.

காயத்ரி சாதனை ஆன்மாவை அறிந்து பிரம்ம ஞானம் பெறுவதற்குரிய சாதனையாக இருந்தாலும் அதில் ஒருவன் வெற்றி பெறாவிட்டாலும் தான் செய்யும் காயத்ரி சாதனையின் பலனாக உடல் பலம், நீண்ட ஆயுள், அழகு, செயல்திறன், இல்லறசுகம், பகைவருக்கு அஞ்சாமை போன்ற பல பேறுகள் காயத்ரி சாதனையின் உப பலன்களாக கிடைக்கின்றன.

இதைப்போல் குறித்த தேவைக்காக காயத்ரி அனுஷ்டானம் செய்யும் போது அந்தப்பலன் கிடைக்காமல் போகலாம். அந்தக்குறிப்பிட்ட நன்மை கிடைக்காததால் சாதனை பலனற்றது என்று மயங்கிவிடாமல் சாதனையை தொடரவேண்டும். இதனால் உடலும் உள்ளமும், வாழ்வும் சீர்படுவது நிச்சயம். அதனால் வாழ் நாள் முழுவதும் இன்பமயமாகி விடுகிறது.

ஆன்மா அழிவற்றது. பிரம்ம சொரூபம்; சித்திகளின் பிறப்பிடம், எரியும் கரி சாம்பலால் மூடப்பட்ட ஒளி மங்கிக்காணப்படும். அதுபோல் அக அழுக்குகளால் மூடப்பட்ட ஆன்மா மங்கி தனது சக்தியை வாழ்வில் செயற்படுத்தாது. காய்த்ரி சாதனையால் ஒருவனில் நிறைந்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் விலகி விடுகின்றது.

சாம்பல் நீக்கப்பட்ட தண்டல் ஜொலிப்பது போல் காயத்ரி சாதனையால் அழுக்கு நீக்கப்பட்ட ஆன்மா பிரம்ம தேஜஸால் ஒளிரும். அப்போது அந்த காயத்ரி சாதகன் எல்லா சித்திகளும் கைவரப்பெறுகின்றான். யோகிகள் நீண்ட கால தவத்தால் பெறும் சித்திகளை காயத்ரி சாதகன் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு எளிய முயற்சியால் குறுகிய காலத்திலேயே அடைகிறான். இந்த காயத்ரி சாதனையின் விளைவினை தற்காலத்தில் விரைவில் நேரிலேயே காணலாம்.

கடந்த அறுபது வருங்களில் இலட்சக்கணக்கானவர்கள் காயத்ரி சாதனையை தமது வாழ்வின் ஒரு அங்கமாக கடைப்பிடிப்பதன் மூலம் தமது வாழ்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். தமது அனுபவத்தின் மூல இவர்கள் சிறந்த காயத்ரி சாதகர்களாகி உள்ளார்கள்.

அனைவரும் தமது கடமைகளை, வாழ்வு இன்பங்களை துறக்காமல் இறை அருளை தம்மில் செயற்படுத்தும் எளிய வழி காயத்ரி சாதனை.
(தொடரும்……)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...