குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 31, 2019

ரிஷி சிந்தனை - 08



காயத்ரி மந்திரம் பெண்களும் சொல்லலாமா என்ற கேள்விக்கு குருதேவர் பண்டிட் ராம் சர்மா ஆச்சார்யாவின் பதில் பின்வருமாறு:

பாரதத்தில் பழங்காலம் முதல் பெண்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டு வந்துள்ளது. பெண்கள் ஆண்களை விட புனிதமானவர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள். பெண்களை தேவி என்றே அழைத்திருக்கிறார்கள். வேதங்களில் உள்ளா எல்லாப்பாடல்களும் ரிஷிகளால் மட்டும் எழுதப்படவில்லை. சில பாடல்களை ரிஷி பத்தினிகளும் எழுதியுள்ளார்கள். கடவுள் அன்புள்ளம் கொண்டவர்கள் ஆண்களும் பெண்களும் அவருக்கு குழந்தைகளே. அப்படியிருக்க அவரால் எப்படி ஆண்களை மட்டும் உயர்த்தி பெண்களை தாழ்ந்த முடியும்?

ரிக்வேதத்தில் (10/85) உள்ள சில மந்திரங்கள் சூரிய சாவித்ரி என்ற பெண் ரிஷியால் உருவாக்கப்பட்டவை. ரிக்வேதத்தில் வரும் லோபமுத்ரா, கோதா, இந்திராணி, ஊர்வசி போன்ற பெண்கள் பிரம்ம வாதினிகளாக இருந்துள்ளார்கள். பிரம்மவாதினி என்ற சொல்லின் பொருள் வேதங்களுக்கு விளக்கம் சொல்லக்கூடியவர்கள் என்பதாகும்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் கற்றறிந்த பெரியோர்கள் வராணாசியில் (காசி) கூடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் “பெண்கள் வேத மந்திரங்கள் சொல்லலாமா கூடாதா?” என்று வாதம் செய்தனர். இதற்கு ஆரம்பமாக குமாரி கல்யாணி என்ற பெண் பல்கலைக்கழகத்தில் வேத பாட வகுப்பில் சேரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தாள். பல்கலைக்கழக அதிகாரிகள் சாஸ்திரப்பிரகாரம் பெண்கள் வேதம் சொல்லக்கூடாது என்று வேத வகுப்பில் அனுமதியளிக்க மறுத்து விட்டனர். இது பற்றி ஆராய மதன் மோகன் மாளவியா அவர்கள் தலைமையில் கற்றறிந்த வேத பண்டிதர் குழு ஒன்று அமைத்து அந்தக்குழு சாஸ்திரங்களை ஆராய்ந்து “ஆண்களுக்கு உள்ளதைப்போல் பெண்களுக்கு வேதம் பயில உரிமை உண்டு: என்று முடிவு கூறியது.
சனாதன தர்மத்தின் உயிர்மூச்சான இந்த முடிவை 1946ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் நாள் மாளவியா அவர்கள் வெளியிட்டார்கள். குமாரி கல்யணி வேத வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.  மதம் மோகன் மாளவியாஜி அவர்கள் மிகப்பெரிய கற்றறிந்த பண்டிதர். தினமும் காயத்ரி உபாசனை செய்பவர். அவருடைய இந்த முடிவின் மூலம் பெண்களுக்கு காயத்ரி சாதனை செய்யும் உரிமை உண்டு என்பது வெளிப்படையாகியுள்ளது.
அந்தக் காலத்தில் சில ஆதிக்க சக்திகள் பெண்களை தமது குறுகிய மனோபாவத்தால் ஒடுக்கி வைத்தனர். இந்த ஒடுக்குமுறை பல்வேறு தளங்களில் நிகழ்ந்தது. அவற்றில் ”பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக்கூடாது” என்ற ஒடுக்குமுறையும் ஒன்று.

எமது கலாச்சாரத்தின் மத்திய காலமானது அன்னியர் ஆட்சியில் ஒரு இருண்ட காலமாக இருந்தது. அக்காலத்தில் உயர்ந்தோர் பலர் தோன்றி சீர்திருத்தங்களைச் செய்தார்கள். அந்த வகையில் மதன் மோகன் மாளவியாஜி செய்த இந்த சீர்திருத்தம் மிக முக்கியமானது. உயிரைப்படைப்பது, சமூகத்தை உருவாக்குவது பெண்களே. அத்தகைய பெண்கள் தெய்வ சக்தி பெற்றாலே நல்ல தெய்வீக குணமுள்ள சமூதாயம் உருவாகும். ஆகவே எல்லாப் பெண்களும் பயமின்றி காயத்ரி சாதனை செய்யலாம்.
(தொடரும்…..)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...