குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 17, 2019

தலைப்பு இல்லை

அமைச்சர் மனோகணேசனின் பேச்சிற்கு எமது கருத்து: 

தேசம் - state என்பதை அமைக்க விரும்பினால் முதலில் நாம் சிறுவட்டங்களில் இருந்து வெளி வரவேண்டும். மதம் என்பது ஒருவன் குறித்த குழு தமது அக ஆன்ம முன்னேற்றத்திற்காக அமைத்துக் கொண்டது. அதை மையமாகக் கொண்டு தேசத்தை உருவாக்கினால் அது மற்றைய மதத்தை சிறுமைப்படுத்தும், தேசம் நாட்டின் வளத்தினை மேம்படுத்தி, பொருளாதாரத்தை விருத்தி செய்து குடிகள் அனைவரினதும் நல் வாழ்க்கைக்கு தேவையானதைச் செய்வதற்கு உரிய நிறுவனம். இலங்கையின் சிறுபான்மையினர் எப்போதும் அந்நிய சக்திகளுக்கு ஆட்படும் ஒரு குழுவாகவே இருக்கிறார்கள் என்பதில் இது ஒரு சாராரிற்கு மட்டும் உரிய தேசம் என்ற எண்ணம் சிறுபான்மையினர் ஆழ்மனதிலும் இருப்பதால் தான் என்பதை சிங்களத் தலைமைகள் புரியவேண்டும். இப்படி இலங்கை என்ற தேசம் உருவாக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரது மனதையும் வெல்லாமல், நம்பிக்கையைக் கட்டியெழுப்பாமல் வெறுமனே மேலோட்டாமாக வார்த்தைகளில் சொல்லுவதால் பிரச்சனை தீரப்போவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், லீ குவான் இன் மந்திரம் " சிங்கப்பூர் சீனர்களுக்கோ, தமிழர்களுக்கோ, மலேயர்களுக்கோ சொந்தமானது அல்ல, இங்கு வரும் எல்லோருக்கும் சொந்தமானது", ஒரு தேசத்தை மதத்தால் வரையறுத்தால் அது மக்களின் மனதைச் சுருங்கச் செய்யும்! 

ஆகவே இலங்கையர் என்ற உணர்வு முதல், மொழி இரண்டாவது, மதம் மூன்றாவது என்ற ஒழுங்கில் அமையவேண்டும்! அனைவரும் நாட்டின் வளத்தினைப்பேணவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும் ஒன்றுபடுவோம், மொழியை, மதத்தை கடைப்பிடிப்பதில் தனித்துவத்தை பேணுவோம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...