குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 26, 2019

ரிஷி சிந்தனை - 03




துன்பத்தை விஞ்சிய வாழ்க்கை பற்றிய தத்துவம் எமக்கு தெளிவானதாக இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும் அதை மனதில் உள்வாங்கி உருவகித்து உணர்வது இயலாத காரியம்.  நாம் அதன் முழுமையான தன்மை பற்றி புரிந்து கொள்ள மாட்டோம். ஏனெனில், நாம் அதை அனுபவபூர்வமாக எம்மிலோ எம்மைச்சுற்றியோ அனுபவித்து அறிந்ததில்லை.

எப்போதாவது எம்மிலோ, எம்மைச் சூழவோ, சமூகத்திலோ இத்தகைய துன்பத்தை விஞ்சிய இன்ப வாழ்க்கை நிகழ்ந்திருந்தால் மட்டுமே, எம்மால் அதன் பலனை கற்பனை செய்ய முடியும். அப்படி ஒரு சந்தர்ப்பம் நிகழ்ந்திருந்தால் அந்த நிலையின் நிபந்தனைகளை மக்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தமது வாழ்வின் நிபந்தனைகளை மாற்றிக்கோண்டு எது அமைதியான, ஆனந்தமான, எளிய வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டு துன்பகரமான வாழ்க்கையில் இருந்து மீண்டு உயர்ந்த தத்துவமுடைய வாழ்க்கைக்கு வர முடியும்.

இத்தகைய உயர்ந்த தெய்வீக எண்ணங்கள் உலகை வழி நடாத்தும் நாள் கட்டாயம் வரும் அல்லது அது வருவதற்குரிய சூழ் நிலைகள் கட்டாயம் வலிந்து ஏற்படுத்தப்படும்.

மக்கள் அத்தகைய ஆனந்தமயமான உயர்ந்த எண்ணங்களையும் அதன் சக்திகளும் செயற்படுவதை, தத்தம் சொந்த அனுபவத்தால் உணரும்போது அவற்றை முழுமையான இதயத்துடன் தழுவிக்கொள்வார்கள். அப்போது முழுமையான மாறுதலடைந்த யுகம் உதயமாகும்.

இப்படி புது யுகம் உதயமாகும் போது செயிண்ட் எமர்சன் கூறியதுபோல் போர்கள் அற்ற மனித சமுதாயம் உருவாகும். அது மட்டுமல்ல எல்லா நோய்களும், துன்பங்களும், பாவங்களும், பற்றாக்குறைகளும், அதிருப்திகளும் இல்லாமல் போகும்.

முழுமையான நன்றியுள்ள வாழ்க்கை கொண்டவனும், உற்சாகமான முழுமனதுடன் ஒப்புதலுமுடையவனுமாக மனிதன் உருவாகுவான். அந்த நிலையில் மனிதன் தேவன் எனவும் சமூகமும் இந்த பூமியும் சொர்க்கம் எனவும் அழைக்கப்படும்.
(தொடரும்…..)

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...