குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, February 10, 2023

சிவ ரகசியம்

சிவராத்திரியை முன்னிட்டு சிவ ரகசியம் என்று ஒரு தொடர் ஒவ்வொரு நாளும் எழுதலாம் என்று திருவருளால் எண்ணம் உண்டாயிற்று! 

எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்றால் "சிவகீதை" யைக் கண்ணில் காட்டியது திருவருள்! 

சிவ கீதை பத்ம புராணத்தில் வரும் ஒரு யோக நூல்! மானிடத் தன்மையுள்ள ஸ்ரீ இராமருக்கு மூன்று ரிஷிகள் குருவாக வாய்த்து தெய்வத் தன்மையை விழிப்பிக்க உதவுகிறார்கள். 

முதலாவது குல குருவான வஷிஷ்டர் - மனம் பற்றிய யோக உண்மைகளை யோக வஷிஷ்டமாக உபதேசிக்கிறார். 

பின்னர் விஸ்வாமித்திரர் கற்ற அஸ்திர வித்தை முதல் கொண்டு field training கொடுக்கிறார். 

இறுதியாக ஸ்ரீ அகத்திய மகரிஷி விரஜா தீட்சை மூலம் சிவபரத்துவம் உண்டாக்கி, பின்னர் பலாதிபலா, ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்ரீ காயத்ரி சாதனையின் உயர்ந்த மந்திரங்களை உபதேசித்து சிவ உபாசனையுடைய இராவணனை வெல்லும் ஆற்றலை உருவாக்குகிறார். 

சிவகீதை படிக்கும் ஒருவனுக்கு இயல்பாகவே தமது மன, உடல் பலவீனங்களை உணர்ந்து அதிலிருந்து மீள குருவின் வழி தீட்சையால் உயரலாம் என்ற உண்மை ஆழமாகப் பதியும். 

வேதங்களின் சாரமான காயத்ரி எனப்படும் சாவித்ரி மந்திரம் எல்லாம் சிவபரமானது என்று அத்தியாயம் - 06, சுலோகம் 14 இல் சொல்லுகிறார். 

யாருக்கு சிவ உபாசனையில் மனம் செல்கிறதோ அவன் எத்தகையவனாக இருந்தாலும் அவனுக்கு மோட்சத்திற்குரிய அதிகாரத்துவம் வாய்க்கிறது என்று இறுதி அத்தியாயத்தின் முதல் மூன்று சுலோகங்கள் எடுத்துரைக்கிறது. சிவ தியானத்திற்கு பிறப்பு ஒரு தடையில்லை என் கிறது. 

இன்னும் பல யோக இரகசியங்களைப் பேசுகிறது! ஒவ்வொரு நாளும் சிறு சிறு பதிவுகளாகப் பார்ப்போம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...