குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 22, 2023

சிவகீதையில் சூக்ஷ்ம தேகம் பற்றிய விளக்கம்

 

சூக்ஷ்ம தேகம்
________________

நேற்றைய சிவகீதைப் பதிவில் ஒரு அன்பர் சூக்ஷ்ம தேகம் என்றால் என்ன என்று கேட்டிருந்தார்; அதுபற்றிய ஒரு சிறுவிளக்கம்:

சித்தர்களும், ரிஷிகளிம் மனிதனை எப்படி ஒரு இயக்கமுள்ள ஒரு கருவியாகப் பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முதல் படியாகும்;

ஆன்மா என்ற உயிரைச் சூழ இருபத்தி நான்கு தத்துவங்கள் கருவிகள் எம்மை இயக்குகிறது. ஆன்மாவைச் சூழ இருப்பதால் இவை ஆன்ம தத்துவங்கள்.

இவையாவன
1. உடலைக் கட்டமைக்கும் பஞ்ச பூதங்கள் ஐந்து (05)
2. கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற பஞ்ச ஞானேந்திரியங்கள் (05)
3. இந்த ஞானேந்திரியங்களால் பெறும் அனுபவங்களான பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், உணர்தல் என்ற பஞ்சபுலன்கள் (05)
4. வாக்கு, கை, கால், குறி, குதம் என்ற பஞ்ச கர்ம இந்திரியங்கள் (05)
5. மனம், புத்தி சித்தம் ஆங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும் (04)

5+5+5+5+4 ஆக மொத்தம் ஆன்ம தத்துவம் 24 ஆகும்.

இந்த இருபத்தி நான்கு தத்துவங்களது இயக்கம் நடைபெறுவது பிராணன் எனும் உயிர் ஆற்றலால். இந்தப் பிராணன் உடலிற்குள் செயற்படும் போது ஐந்து விதமான நிலைகளால் பஞ்சப் பிராணன்கள் என்று அழைக்கப்படும். இவை கண்ணுக்குத் தெரியாதவை; இயக்கத்தால் மாத்திரம் அறியப்படுபவை. சூக்ஷ்மமானவை.

மேலேயுள்ள 24 ஆன்ம தத்துவங்களில் ஞானேந்திரியங்களும், அவற்றை உணரும் அந்தக்கரணங்களும் சூக்ஷ்மமானவை.

ஒரு மனிதனின் சூக்ஷ்ம தேகம் என்பது
பஞ்சபுலன்கள்+ அந்தக்கரணங்கள் + பஞ்சப்பிராணன்களின் கலவை.

கண்ணால் பார்க்கும் போது கண் ஸ்தூலம், கண்ணினுடைய பார்வை எங்கு பதியப்படுகிறதோ அந்தப்பகுதியின் "அனுபவம்" அந்தக்கரணங்களாலும், பிராணனாலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை சூக்ஷ்ம தேகம் என்று சொல்லப்படுகிறது.

எங்களுடைய சூக்ஷ்ம தேகம் எனப்படுவது நாம் எமது புலன்களால் பெறும் அனுபவமும், அந்த அனுபவம் எமது மனம் என்று பொதுவாகச் சொல்லப்படும் அந்தக்கரணம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதும், இதற்குரிய பிராண ஓட்டம் எப்படி நடைபெறுகிறது என்பதும் சேர்ந்த கலவையாகும்.

எனவே சூக்ஷ்ம தேகத்தைப் புரிந்துகொள்ள ஞானேந்திரியங்களால் பெறும் அனுபவங்களான பார்த்தல், கேட்டல், மணத்தல், சுவைத்தல், உணர்தல் என்ற பஞ்சபுலன்கள், மனம், புத்தி சித்தம் ஆங்காரம் என்ற அந்தக்கரணம் நான்கும், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற பஞ்சப் பிராணன் கள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்.

இலகுவாக விளங்கிக் கொள்வதானால் கனவு சூக்ஷ்ம தேக அனுபவம்; இந்த பஞ்ச ஞானேந்திரியம், அந்தக்கரணங்கள், பஞ்ச பிராணன் உடலிற்குள் ஏற்றுக்கொண்ட அனுபவனகளை மீட்டிப் பார்த்தல் கனவு! இதை செம்மைப்படுத்தி எமது இச்சாசக்தியால் பயணிக்க வைப்பது சூக்ஷ்ம தேக பயணம் - astral travelling.

இவை ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்த யோகசாதனையில் பயிற்சி உண்டு; எமது பாடத்திட்டங்களில் கற்பிக்கப்பட்டிருக்கிறது,

கேள்விக்கு நன்றி Periyar Selvan Pitchaimani

நல்ல சரியான கேள்விகள் மூலம் இன்னும் ஆழமான விஷயங்களை உரையாட முடியும்! 

See less

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...