குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, February 05, 2023

ஜோதிட விளக்கம்

ஜோதிடத்தை முழுமையாக விளக்கக் கூடிய ஒரு பதிவினை எழுத வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! நான் ஜோதிடனா என்று எவராவது கேட்டால் அதற்கு பதில் இல்லை! ஏனென்றால் நான் ஒரு அறிவுத் தேடலுள்ள ஒரு பயணி! நான் ஜோதிடம், சித்த ஆயுள்வேத மருத்துவம், சூழலியல், யோக சாத்திரம், சித்த மார்க்கம் இன்னும் பல.. இவற்றுள் எந்தவொரு அறிவுத் துறையையும் எனக்கு அடையாளமாக்கி அதன் மேல் சவாரி செய்ய விரும்புவதில்லை!

சிறுவயதில் ஒரு சாத்திரியார் ஜோதிடம் என்ற பெயரில் என்னை பலருக்கு முன் வைத்து சொன்ன ஒரு கருத்து அவர் பொய்யன் என்று நிருபிக்க, அவருக்குத் தெரிந்தது எனக்கும் தெரிய வேண்டும் என்று ஒரு வீம்பிற்கு படிக்கப் போய் எதைத் தொடங்கினாலும் ஆழமாகவும், அகலமாகவும் வலை வீசுவது பழக்கமானதால் படிக்கத் தொடங்கியது, தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள், சமஸ்க்ருத மூல நூல்களின் மொழிபெயர்ப்புகள், மேற்கத்தேய occlut astrology, esoteric astrology என்று நீண்டுகொண்டு சென்றது! 

அம்பாளை உபாசிக்கத் தொடங்கிய பின்னர் அவளது வித்யா தத்துவங்களின் கால, நியதி தத்துவங்களின் வெளிப்பாடு தான் கிரகங்கள், நட்சத்திரங்கள் என்று உணர்ந்த பின்னர் அவளைச் சரணடைந்து விட்டு நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலை வாய்த்தது. 

ஆனால் சில காலத்திற்கு முன்னர் ஒரு தேவி உபாசகர்; தலைமுறை தலைமுறையாக ஜோதிட ஞானம் உடையவர்கள்; எனது ஜாதகத்தைப் பார்த்து விட்டு எனக்கு மட்டும் தெரிந்த எனது ஆன்மீக வாழ்க்கை இரகசியங்களை புட்டுப் புட்டு வைத்ததால் மீண்டும் பழைய ஜோதிட ஆசை துளிர்த்துக் கொண்டது. 

என்னைப் பொறுத்த வரையில் எவரும் எதிர்காலத்தை அறிய ஜோதிடத்தைப் பயன்படுத்தக் கூடாது; அது எமது இச்சா சக்தியினதும், இறையருளினதும் வெளிப்பாடு. 

இனி ஜோதிட விருட்சம் என்ற இந்தப் பதிவிற்கு வருவோம்! 

பதினைந்தாம் நூற்றாண்டு சமஸ்க்ருத நூலான வைத்தியநாதர் எழுதிய ஜாதக பாரிஜாதம் என்ற நூல் ஜோதிட விருட்சம் என்ற ஒரு bigpicture concept ஐ ஜோதிடத்திற்கு கொடுக்கிறது. 

ஜோதிடம் என்பதனைத் தாங்கும் வேர்கள் எவை?

நிமிர்த்தும் தண்டுகள் என்ன? கிளைக்கும் கிளைகள் எவை? செழிக்கும் இலைகள் எவை என்று வகைப்படுத்துகிறார். 

ஜோதிடத்தின் வேர் ஏழு சாஸ்திரங்களின் மறையியல் அடிப்படையைக் கொண்டவை

1) ருக் வேதம்

2) அதர்வண வேதம்

3) சாமவேதம்

4) யஜூர் வேதம்

5) உப நிஷதம்

6) புராணங்கள்

7) தந்திர/ ஆகம சாஸ்திரம் 

மேற்குறித்த மறையியல், மெய்யியல் கோட்பாடுகளை வேராகக் கொண்டு உருவாகிய தண்டுதான் (trunk) ஜோதிடம். மேற்குறித்த எதையும் படிக்காமல், அதன் மெய்யியல் புரியாமல் ஜோதிடத்தின் விதிகள் எதையும் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியாது. வேத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையையோ, புராண, தந்திர சாஸ்திர அடிப்படியாகக் கொண்ட மெய்யியல் வாழ்க்கையில் இல்லாமல் ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்த முடியாது. ஆகவே மேற்குறிப்பிட்ட ஏழு சாஸ்திரங்களினை அடிப்படையாகக் கொண்ட மெய்யியலின் அடிப்படையிலேயே ஜோதிட சாஸ்திரத்தின் கோட்பாடுகள் புரிந்துக் கொள்ளப்படுகிறது. 

இந்த ஏழு சாத்திரங்களின் வேரில் முளைத்த தண்டு தான் ஜோதிடம்

இந்த தண்டு மூன்று கிளைகளாக பிரிகிறது. இந்தக் கிளைகள்

1) சம்ஹிதை - எதிர்காலப் பலன்களை, செயல்களைக் கூறும் விதிகள்

2) ஹோரா - ஜாதகம் கணித்தல் 

3) சித்தாந்தம் - வானியலும் கணித முறையும்

இவை மூன்றும் மேலும் சிறுகிளைகளாகி இலைகளாக பல்வேறு சாத்திரங்கள் உருவாகின்றன. 

சம்ஹிதை என்ற பெரும் கிளையிலிருந்து உருவாகிய 12 சிறுகிளைகள் வருமாறு: 

1)Treatises on breath - ஸ்வர ஜோதிடம்

2)Discussion of oneirology - கனவுகளின் பலன்

3) Examination of falling lizards - பல்லி சொல்லுதல், விழுதல் பலன்

4) Treatises on predicting rain - மழை கால நிலை கணித்தல்

5) Effects of good or evil omens as a result of trembling in different parts of the 

body - உடலின் பாகங்கள் துடித்தல் கொண்டு சுப அசுப நிலைப் பலன் காணுதல். 

6) Treatises on the examination of earth, sites, buildings, and so on - பூமி சுத்தி வாஸ்து கணிதம்

7) Collections of treatises on appeasement rituals - சாந்திக் கிரந்த ரகசியம்

 Collections of treatises on presages - சகுன நிமித்த சாஸ்திரம்.

9) Study of the auspicious and inauspicious influence of the movement of the planets 

- கிரக கோட்சாரத்தால் ஏற்படும் சுப அசுப பலன்கள்.

10) Treatises on signs, presages, and marvels (adbhuta-utpāta-lakṣaṇa-granthāḥ) - குறியீடு, சோழி, வெற்றிலைப் பிரசன்னங்கள்

11) Treatises on physiognomy - சாமுத்ரிகா லக்ஷணம் 

12) Study of the cost of cheap and expensive substances - லாப நஷ்ட கணிதம் 

ஹோரை என்ற பகுதிக்குள் ஆறு கிளைகள் இருக்கிறது

1) Collections of treatises on natal horoscopy - ஜாதகம் கணித்தல்

2) Collections of treatises on the Perso-Arabic art of casting horoscopes (tājika-grantha) - உருது பார்சிய ஜோதிட முறை 

3) Compilation of treatises on the horoscopy of queries - பிரசன்ன ஜோதிடம் 

4) Collection of horoscopy treatises on auspicious moments - முகூர்த்த ஜோதிடம் 

5) Studies of lost birth horoscopes - நஷ்ட ஜாதகம்

6) Treatises on the composition of almanacs - பஞ்சாங்க நிர்ணயம் 

சித்தாந்தம் எனும் கணிதப்பகுதியில் 10 கிளைகள் இருக்கிறது. 

1) Collections of concise astronomical manuals (karaṇa-grantha-rāśayaḥ). - சுருக்கமான வானியல் கையேடுகள்

2) Study of the “bowstring” or the sine (jyām-iti viṣayāḥ).- இந்திய முறையில் செங்கோணத்தின் விகிதங்களைக் - சைன் பெறுமானங்களைக் கொண்டு வானியலைக் கணிப்பிடும் கேத்திர கணித முறை 

3) Algebraic studies (bīja-gaṇita-viṣayāḥ).- அட்சரகணித முறைகள்

4) Studies of differential calculus (calana-kalana viṣayāḥ). - நுண்கணிதம் 

5) Studies of arithmetic (pāṭi-gaṇita-viṣayāḥ).

Studies of “arc trigonometry” (cāpīya-trikoṇam-iti viṣayāḥ).

6) Geometrical studies (rekhā-gaṇita-viṣayāḥ) - கேத்திர கணிதம் 

7) Lessons on the spheres (gola-adhyāyaḥ) - கோள கணிதம் 

 Studies of “triangles” (trikoṇam-iti viṣayāḥ). முக்கோண கணிதம் 

9) Studies of the geometry of the spheres (golīya-rekhā-gaṇita-viṣayāḥ) - கோளங்களின் கேத்திர கணித கணிதம் 

மேற்குறித்த பத்துக் கணித முறைகளையும் பாவித்துத் தான் ஜோதிடத்திற்குரிய கணிதங்கள் உருவாக்கப்படுகிறது. 

ஆக ஒருவன் ஜோதிடத்தைப் புரிய வேண்டும் என்றால் அதன் வேர்களில் சிலவற்றினது அடிப்படை மெய்யியலைப் புரிந்திருக்க வேண்டும்; அந்த மெய்யியல் அடிப்படையில் இருந்து தான் ஜோதிடத்தை உரையாட முடியும்! 

ஜோதிடத்தின் சித்தாந்த, ஹோரைப் பகுதிகள் முழுமையான கணித அடிப்படையைக் கொண்டவை; சம்ஹிதைப் பகுதி அனுபவ, meta physical nature உடையவை. 

பஞ்சாங்க கணிதம் கிரகணங்களைச் சரியாகக் கணிப்பது அது விஞ்ஞானப் பூர்வமானது என்பதை நிரூபணம் செய்கிறது. ஆனால் அதனால் ஏற்படும் விளைவு என்று சொல்லப்படும் சம்ஹிதைப் பலன்களை நாம் அறிவியல் என்று வகைப்படுத்த முடியாது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...