குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 22, 2023

கால பைரவ உபாசனையும் கால ஞானமும்

 கடந்த நவராத்ரி முடித்துவிட்டு நீண்ட கொரோனாக் காலத்தின் பின்னர் பாரதத்திற்கு விஜயம் செய்ய வேண்டியிருந்தது. எனது குரு நாதர் கூறிய கடமைகளில் ஒன்றான பைரவ உபாசனை புரச்சரணம் காசியில் பூர்த்தி செய்யச் சொல்லியிருந்த ஒரு கடமை இனிதே பூர்த்தியாகியது.

அங்கிருந்து வந்தத்திலிருந்து என்னுடன் வந்த மாணவர்களுக்கு புறவயமாக காலச்சக்கரம் வேகமாக நகரத்தொடங்க எனக்கோ அகவயமாக நகரத்தொடங்கிவிட்டது.
தேவியின் வித்யா தத்துவத்தில் உள்ள கால நியதி தத்துவங்களைப் புரிந்துகொள்ளும் தளம் தான் ஜோதிஷ சாத்திரம் என்பது புரிய ஆரம்பித்தது.
ஜோதிடம் என்பது தமிழில் பலரும் நமக்கு நடப்பதைக் கணிப்பது என்று மாத்திரம் சிந்திக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரம் முற்காலத்தில் காலத்தையும் (time) & இடத்தையும் (Space) பொருத்தி சிந்திக்கும் ஒரு மெய்யியல் முறையாகும்.
காலத்தையும் நேரத்தையும் நேர்கோடாகக் கருதினால் அடிமுடி காணமுடியாத ஒன்றாகத் தான் இருக்கும். தோற்றமும் முடிவும் இல்லா, ஆதியும் அந்தமும் இல்லாத ஒளிப்பிழம்பாக ஆகி விடும். மனித மனத்தால் இதை அறிந்துகொள்ள முடியாது.
ஆனால் நாம் சூரிய, சந்திர, பூமி, நட்சத்திர இயக்கங்களை வைத்துக்கொண்டு நாம் புலன் களாலும் மனதாலும் உணர்ந்தறியக்கூடிய இரவு பகல், ருதுக்கள், அயனங்களை வட்டஇயக்கமாகமான சார்புக் காலத்தினை உணரக்கூடியதாக இருக்கிறது.
காலம் நேர்கோடாக இருக்கும் போது ஆதியும் அந்தமும் இல்லாத நிர்குணமான எல்லையற்ற பரம்பொருளான இறைவன் என் கிறோம்.
காலம் வட்டச் சுழற்சிக்குட்பட்ட மீண்டும் மீண்டும் தோன்றும் தன்மையுடைய இயக்கத்தை சூரியன் சார்பாக பார்க்கும் போது இரவு பகலாக, ருதுக்களாக, அயனங்களாக கருதுகிறோம்.
சூரியனைச் சார்பாக வைத்து காலத்தை பகல் இரவு, மாதம் வகுக்கிறோம்
சந்திரனைச் சார்பாக வைத்து காலத்தை வளர் பிறை, தேய்பிறை, மாதத்தை வகுக்கிறோம்.
யோகத்தில் புருவமத்தியைத் தாண்டி மனோன்மணி அவஸ்தைக்குள் செல்லும் போது யோகி காலத்தைக் கடக்கிறான் என்று சொல்லப்படுகிறது, இதன் அர்த்தம் அவன் கிரக, நட்சத்திரம் சார்பான வட்ட இயக்க காலத்தை கடந்து நேர்கோட்டு இயக்கமான காலத்திற்குள் பிரவேசிக்கிறான் என்று அர்த்தம். மனித உடலில் இந்த நேர்கோட்டு கால இயக்கம் சுழுமுனை நாடியாகக் குறிப்பிடப்படுகிறது. வட்ட இயக்க காலம் முலாதாரத்தில் தொடங்கி, புருவ மத்தியில் முடியும் ஒன்றுடன் ஒன்று இனைந்த மூன்று இடத்தில் (பிரம்ம, விஷ்ணு, ருத்ர) முடிச்சுகள் உள்ள இடகலை பிங்கலை நாடிகளாகக் குறிப்பிடப்படுகிறது. நட்சத்திர மண்டலத்தில் இந்த மூன்று கிரந்தி கண்டாந்தமாக நீர் இராசிகள், நெருப்பு ராசிகளைச் சந்திக்கும் புள்ளிகளாக குறிப்பிடப்படுகிறது.
முதல் முடிச்சு மீனராசியின் முடிவும் மேஷ ராசியின் தொடக்கத்திலும்
இரண்டாவது முடிச்சு கடகராசியின் முடிவும் சிம்ம ராசியின் தொடக்கமும்
மூன்றாவது முடிச்சு விருட்சிக ராசி முடிவிலும் தனுசு ராசி ஆரம்பத்திலும்
இருக்கின்றன.
பொதுவாக ஜோதிடத்தில் இந்தப் புள்ளிகளை இரண்டு நேரான கையிற்றைக் கட்டி மூன்று வட்டங்களை ஆக்கும் உருவமாக உருவக்கிக்கலாம். இப்படித்தான் இடலை பிங்கலை நாடிகள் உடலில் முடிச்சுக்களாவதாக யோக நூல்கள் குறிப்பிடுகின்றன.
உடலின் இந்த முடிச்சுத் தன்மையால் சாதாரண நிலையில் காலத்தை சூரிய சந்திர, நவக்கிரக, நட்சத்திரம் சார்பாகவே மனிதனால் உணர முடியும். ஆனால் புருவத்தியில் உணர்வை நிறுத்தக்கூடிய யோகி நேர்கோட்டுக் காலத்தை அனுபவிக்க முடியும்; உண்மையில் இந்த நிலையை காலாதீதம் என்றே எமது தத்துவங்கள் குறிப்பிடுகின்றன.
ஜோதிடம் என்பது சூரிய சந்திர, நவக்கிரக, நட்சத்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான சார்புக் காலதத்துவங்கள்.
கணித்தல் என்பது சார்புத்தளத்திலேயே செய்ய முடியும்; x இன் சார்பாக Y இன் இயக்கத்தைக் கணிக்க முடியும். இப்படி 27 நட்சத்திரங்கள் என்ற ஆள்கூற்றுத் தளத்தில் பிரதானமாக பிறக்கும் போது கிழக்கு வானத்தில் உதயமாகும் ராசி மண்டலத்தினை ஆரம்ப புள்ளியாக லக்கினமாக வைத்துக்கொண்டும், சந்திரன் நின்ற புள்ளியை வைத்துக்கொண்டும் எமது அகக் காலம் (internal time) புறக்காலம் (external time) எப்படி இயங்குகிறது என்ற கணிதமே ஜோதிடம்.
கடவுள் என்ற கோட்பாட்டினை உணரும் போது அவன் நேர்கோட்டு நேரத்திற்குள் வந்து விடுகிறான்; அறிவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சம் வளைவானது என்று மட்டுமே அறிந்திருக்கிறார்கள்; அதனால் கடவுள் இருப்பதற்கான சாத்தியம் இல்லை! ஆனால் யோகம் காலாதீதமாக நேர்கோட்டு காலத்தை அனுபவிக்க முடியும் என் கிறது.
ஹர ஹர மஹா தேவ
காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே!
கீழேயுள்ளது எமது மாணவர்கள் சார்பாக காசி காலபைரவருக்குரிய அலங்காரம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...