குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, February 17, 2023

சிவகீதை

 - சிவ சிவ -


சிவகீதை பற்றி எழுதத் தொடங்கி அனேகருக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது. இந்த நூலை அச்சிட்ட சித்தம் சிவமய அறக்கட்டளையினருக்கு பல அன்பர்கள் நூல் பெற விண்ணப்பித்த வண்ணம் இருக்கிறார்கள்! இதன் தொடர்ச்சியாக சிவகீதையை நாம் சித்த யோக நூல்கள் படிப்பதுபோல் முறைப்படி உரையாடிக் கற்கலாமே என்ற யோசனை எமது மாணவர்களால் முன்வைக்கப்பட்டது!

நல்ல விஷயத்தை தாமதிக்கக் கூடாது! சிவராத்ரியிலேயே தொடங்கி விடலாம் என்று முடிவு எடுத்தாயிற்று!

திட்டம் இதுதான் -
சிவகீதையில் 16 அத்தியாயங்கள் இருக்கிறது; நாளை சிவராத்ரி நூலைப்பற்றிய முழு அறிமுகம் முதல் வகுப்பாக நடைபெறும். பிறகு மாதம் இருமுறை வரும் பிரதோஷங்களில் இரவு 0900 மணிக்கு ஒவ்வொரு அத்தியாயமாக உரையாடல் நடைபெறும்.

சிவ அருளைப் பருக எவருக்கு தடையில்லை! எல்லோரும் வரலாம்.

Zoom Meeting ID: 873 9681 6612
Passcode: 012478

ஆடிப்பாடி சிவராத்ரியை கொண்டாடுவது புலன்கள் வெளியே ஓடித்திரிபவர்களுக்கு! உள்ளே மனதினை ஒடுக்கி சிவ மௌனத்தில் அருள் பெற விரும்பவர்கள் அவரவர் வீட்டிலிருந்து ஜெப தபங்களுடன் சிவகீதை படிப்பது மிக ஆழ்ந்த அமைதியையும் ஆனந்தத்தினையும் உண்டாக்கும்.

நாளை சிவராத்ரி அன்று அகத்திய சித்த மரபுப் படி மூல குரு மந்திரம் - இதுவும் சிவ மந்திரம்தான் - ஸ்தூல, சூக்ஷ்ம, அதிசூக்ஷ்ம பஞ்சாஷரமும், ம்ருத்யுஞ்ஜெய மந்திர ஜெபத்துடன் வகுப்பு ஆரம்பமாகும். சாதனை பயில விரும்புவர்கள் நாளை தொடங்குவது மிகச் சிறப்பானது.

அகத்தூண்டல் உள்ள அனைவரும் வருக! 



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...