குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 11, 2023

சிவசின்னமாகிய விபூதி எனும் உடலாரோக்கியம் தரும் அக்னி அஸ்திரம்

சிவ கீதையின் உரையாடல் எல்லாப் புராணங்களைப் போல் சுத மகரிஷி கூறியதாக ஆரம்பித்து, பிறகு அகத்திய மகரிஷி இராமருக்கு உபதேசித்ததைக் கூறி பிறகு இராமர் தன் தபஸால் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற அனுபவத்தை யோக இரகசியங்களாக உரைக்கிறது. 

இதில் மிக முக்கியமான ஒன்று விபூதி பற்றிய இரகசியம்; விபூதி - திரு நீறு என்பது என்பது சைவர்களால் நெற்றியில் அணியப்படும் சிவ சின்னங்களில் ஒன்று என்றும் இதற்கு விளக்கம் கேட்டால் சாதாரண மனிதன் பயப்படும் படி நாம் எல்லாம் ஒரு பிடிசாம்பலாகப் போகிறோம் என்று ஒரு தத்துவத்தைக் கூறி அறநெறியில் இறைச் சிந்தனையோடு வாழ வேண்டுமென உணர்த்துவதாக விளக்கம் சொல்லுகிறார்கள். 

ஆனால் சிவகீதை இப்படித் தத்துவமாக விபூதியைச் சொல்லவில்லை. சித்த மருத்துவத்தின் மிக உயர்ந்த மருந்துகளில் ஒன்று சுண்ணம் அல்லது பஸ்பம். இந்த மருந்துகளின் ஒரு உயர்ந்த தன்மை அதன் உயர் அக்னித் தன்மை. சித்த ஆயுர்வேத மருந்துகளின் அடிப்படை பஞ்சபூதக் கோட்பாடு; உடலியல் இயக்கம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு அக்னியின் அளவு சரியாக இருக்க வேண்டும். அக்னியின் அளவு கூடி உடலை சமப்படுத்தும் தன்மையினை நாம் காய்ச்சல் என்கிறோம். உடலில் ஏதாவது நோய்க்  கிருமிகள் நுழைந்தால் சுரம் அல்லது காய்ச்சல் உண்டாவதன் மூலம் அக்னி அதிகரித்து உடல் ஆரோக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஆயுர்வேதத்தில் சுரம் என்பது உடலில் உறையும் சிவமாக்கிய அக்னியின் சீற்றம் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாட்சரத்தில் சிகாரம் அக்னி பூதத்தைக் குறிப்பிடுகிறது. 

இப்படிப்பட்ட அக்னியின் தன்மையை உடலில் அதிகரிக்கவே விபூதி பயன்படுத்தப்படுகிறது; தலையில் நீர்கோர்த்தால் விபூதிப்பத்து நீக்குகிறது என்பது விபூதியின் அக்னி அமிசத்தாலேயே. 

சிவகீதை அத்தியாயம் 03, சுலோகம் 31, 31 இல் விபூதி அணிபவன் அக்னித் தன்மை அதிகரிப்பதால் ஒருவன் வீரியவானாகிறான் என்று சொல்லப்படுகிறது. பஸ்ம ஸ்நானம் செய்வதால் உடல் அக்னி சிறந்து புலனடக்கம் வாய்க்கிறது என்ற உண்மையைச் சொல்லுகிறது. 

இந்த சுலோகம் சித்த மருந்துகளில் சுண்ணம்/பஸ்மம் ஆகியவற்றிற்குரிய பஞ்சபூதக் கோட்பாட்டினைப் புரிந்துக் கொள்ளவும் உதவுகிறது. 

சிவ சின்னங்களில் விபூதி என்ற ஐஸ்வரியம் ஒருவனில் அக்னித் தன்மையை சரிப்படுத்தி உடலாரோகியத்தைத் தருகிறது என்ற உண்மை சிவகீதையில் விளங்கப்படுத்தப்படுகிறது. 

விபூதி - திருநீறு உடலாரோக்கியம் தரும் அக்னி அஸ்திரம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

சைவ ஆகமங்கள்

சைவ ஆகமங்கள் பாரம்பரியமாக நான்கு வரையறைக்குள் அடக்கலாம் என்று Jayendra Soni தனது philosophical anthropology in Saiva Siddhantha என்ற நூலில் ...