குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, February 22, 2023

ஸோமனின் ஆன்ம அனுபவங்கள்

 இன்று ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள்!

ஸோமனுக்கு சிவராத்ரி மிகச்சிறப்பான நாள்! சிறுவயதில் குருவுடன் இருக்கும் காலத்தில் குருநாதர் ஸோமனை ஒரு எட்டு மாதங்கள் தன்னுடனே தங்கும் படி கூறி சிவராத்ரி தினத்தின் துரிய சந்தி பூஜையின் பின்னர் தீட்சையளித்தார். அந்தத் தீட்சையின் பின்னர் " தரவேண்டியதெல்லாம் விதைகளாக சித்தத்தில் பதிப்பித்தாகிவிட்டது; அவை வளர்ந்து விருட்சமாகி கனியாகும் போது பறவைகள் தேடிவரும், இனி இங்கு வரத்தேவையில்லை, எனது காலில் விழ்ந்து ஆசீர்வாதம் வாங்கத்தேவையில்லை, சென்று படிப்படைப் பார்க்கலாம்" என்று ஆசி கூறி அனுப்பிவிட்டார்.
இந்த சிவராத்ரி ஸோமன் குரு நாதர் அகத்தியரின் அருளால் சிவகீதை படித்து அதிலுள்ள யோக நுணுக்கங்கள் எல்லாம் தொகுப்பது என்ற குரு ஆணையை எடுத்துக்கொண்டு தனது நவாவரண பூஜை, சிவபூஜையைப் பூர்த்தி செய்து தியானத்திற்குச் சென்றான். தியானம் சற்று சமாதி நிலையை எட்டியபோது,
ஒரு புராதன் கோட்டையின் நந்தவனம் சூழ் முற்றத்தில் பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை அமர்ந்திருக்க வரிசையாக ஒவ்வொருவரும் ஆசி வாங்குகிறார்கள், ஸ்ரீ அன்னை தலையில் தனது கையை வைத்து புன்முறுவலுடன் ஆசீர்வதிக்கிறார். ஸோமனும் அந்த வரிசையில் நிற்கிறான். அவனுக்கு அன்னை கையை வைத்து ஆசீர்வதிக்க ஸோமன் அன்னையே எனக்கு ஒரு பிரத்தியேகமான ஆசி வேண்டும் என்று விண்ணப்பிக்க அன்னை அன்னை தலையை அசைத்து ஆமோதிக்கிறார்.
அன்னையே, நான் பூரண யோக சித்தி பெறவேண்டும் என்று விண்ணப்பிக்க,
அன்னை புன்முறுவலுடன், கூர்ந்து கவனி, உன் சஹஸ்ரார சக்கரத்திலிருந்து பொன்னொளி புருவமத்தியில் நிறைகிறது என்று கூறி மீண்டும் கையை தலையில் வைக்கிறார்.
தலையைத் திருப்பி பின்னிருக்கும் தன து உதவியாளரிடம் "இதோ இளவரசன் வந்துவிட்டான்" என்று சொல்ல அங்கிருப்பவர்கள் பரபரப்புடன் ஸோமனுக்கு வணக்கத்துடன் மரியாதை செலுத்துகிறார்கள்; பின்னர் மரியாதையுடன் கோட்டையினுள் அழைத்துச் செல்கிறார்கள்.
ஸோமனின் தியானக் காட்சி அனுபவம் கலைகிறது; சிவராத்ரி பிரம்ம முகூர்த்த நேரத்தை அண்டிவிட்டது; எழுந்து வில்வார்ச்சனையைப் பூர்த்தி செய்து தனது சிவராத்ரி அனுஷ்டனத்தைப் பூர்த்தி செய்தான்,
ஸோமனின் ஆன்ம அனுபவங்கள் தொடர்கிறது....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...