குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, March 03, 2021

தாவோ தி ஜிங் சூத்திரம் - 02

அனைவரும் அழகினை அழகு என்று புரிந்துகொண்டால் அது விகாரப்பட்டுவிடும்!

அனைவருக்கும் நன்மை எதுவென்று புரிந்துவிட்டால் பிறகு அது நன்மையற்றதாகிவிடும்!

ஆகவே இருப்பு, இருப்பின்மை ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று உருவாக்குகிறது!

கடினமும் இலகுவும் ஒன்றை ஒன்று நிரப்புகிறது.

நீளமும் குட்டையும் ஒன்று இன்னொன்றுக்கு வடிவம் தருகிறது.

ஒலியும் எதிரொலியும் ஒன்று இன்னொன்றை உறுதிப்படுத்துகிறது.

முன்னதை பின்னது தொடர்கிறது.

ஆகவே ஞானிகள் இவற்றைப் புரிந்துகொண்டு

முயற்சியற்ற சேவையை

சொற்கள் அற்ற மௌன உபதேசத்தால் போதிக்கிறார்கள்!

இந்தச் சூத்திரத்தின் மீதான ஸ்ரீ ஸக்தி சுமனனின் குறிப்பு

************************************

இந்தச்சூத்திரம் மனித மனதின் இயக்கத்தினைப் பற்றியது! சபரிமலை புனிதமானது என்பதை உலகிற்கு அறிவித்துவிட்டதால் அந்தப்புனிதமான பூமியை அசுத்தப்படுத்த அருள் பெறப்போகிறேன் என்று கூட்டம் கூட்டமாக கிளம்பிவிடுவான்!

சதுரகிரியில் அபூர்வ மூலிகை இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவித்துவிட்டால் அவற்றை வேட்டையாட பேராசை கொண்ட மனிதன் மலையேறத்தொடங்கிவிடுவான்!

திருவண்ணாமலையில் ஜோதி இருக்கிறது என்று சொன்னவுடன் ஒவ்வொரு பௌர்ணமியும் பிளாஸ்டிக்கினால் அசுத்தபடுத்தி விடுவான்!

கற்றாழைக்கு புற்று நோய் நீக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்துகொண்டால் சாமானியனுக்கு கற்றாழை கிடைக்காமல் செய்துவிடுவான்!

இப்படி மனிதன் தனது பேராசையும், அதியாசையும் கொண்ட குணத்தால் எல்லாவற்றையும் தனக்குரியதாக்கிக் கொள்ளவேண்டும் என்று ஊசலில் ஒரு எல்லைக்குச் செல்வதையே வெற்றி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் ஒரு அதி எல்லை இன்னொரு அதியெல்லையை உருவாக்குகிறது. மனிதப் பிணக்குகளில் இதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இப்படி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தினைப் புரிந்துகொண்ட ஞானிகள் உண்மையை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்வதில்லை!

சித்தர்களும் இதனால்தான் பரிபாஷை என்று உண்மையை உணர்ந்தவன் மாத்திரம் புரியக்கூடிய, உணரக்கூடிய மொழியில் கூறிவைத்தார்கள்! பேசாத மந்திரம், மௌன அனுபவம் என்று கூறிவைத்தார்கள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...