குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 26, 2021

தலைப்பு இல்லை

 

கிருபை எனும் வார்த்தைக்கு ஒரு விஷேட பொருள் உண்டு! எந்த எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்கள் மேல் கருணையுடன் இருத்தல்!

இன்று நாம் தனிமனித, சமூகப் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுகிறோம்! இவற்றில் எப்போதும் மற்றவரை ஒரு வட்டத்திற்குள் முத்திரை குத்தவே விரும்புகிறோம். முத்திரை குத்துதலும், தண்டனைக்கு உட்படுத்துதலும் ஒருவித மனவக்கிரத்தை தண்டனைக்குள்ளானவர் மேல் காட்டும் செய்கையாகத்தான் தற்போது நடைபெறுகிறது.

ஆனால் தண்டனையின் தத்துவம் ஆழமானது; கிருபை நிறைந்தது! ஒருவன் தான் என்ன செய்கிறேன், அதன் விளைவு என்ன என்று அறியாத அளவிற்கு அவனது மனதை, எண்ணத்தை உணர மறந்த மனிதன், விழிப்புணர்வு இல்லாமல் குற்றத்தை (சமூகம் வெறுக்கும், சட்ட ஒழுங்கு அனுமதிக்காத செயலைச்) செய்கிறான். அவன் அவசரப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால் அவனை நிறுத்தி, சீர்தூக்கி சிந்திக்க தனிமைப்படுத்தி, அவன் தனது சொந்த மனதின் இயல்பின்படி செயல்பட முடியாமல் குறித்த ஒழுங்கின்படி சிந்திக்க பயிற்றுவிக்கும் ஒரு களமாகவே தண்டனை பார்க்கப்பட வேண்டும். ஆகவே தண்டனை என்பது சத்தியத்தை நோக்கி ஒருவன் தனது விழிப்புணர்வினை செலுத்துவதற்கான வாய்ப்பாகவே கணிக்கப்படவேண்டும்.

இதுவே ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையில் நடைபெற்றது ரஜோ குணமிகுதியால் தீவிரவாதமும், போருமே விடுதலைக்குரிய கருவிகள் என்று எண்ணிச் செயல்பட்ட இந்திய சுதந்திரப்போராட்டத்தின் அத்திவார நாயகன் ஸ்ரீமான் அரவிந்த கோஸ் தனது அலிப்பூர் சிறைவாசத்தினால் அகமுகமாகி, யோகியாகி புதிய மனித குலத்திற்குரிய விதிகளை உலகிற்குத் தரும் பரம்பொருளின் பணியை ஏற்று புதுச்சேரி வந்து ஸ்ரீ அரவிந்தர் ஆகினார்!

வாழ்வு எம்மை எல்லைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் - பிரச்சனைகள், அடக்குமுறை, பாரபட்சம், அவமதிப்புகள் - இயற்கை எம்மை அகமுகமாக்கி தனது கிருபையை, ஆற்றலை, விதிகளை பயிற்றுவிக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் என்று கொள்ளப்படவேண்டும்.

இதற்கு மேல் தண்டனை பெறுபவன், அவமானப்படுபவனை முத்திரை குத்தும் முயற்சி மிகவும் ஞானமற்ற செயல்! சமூக முன்னேற்றம் வேண்டிச் செயற்படுபவர்கள் தவறு இழைப்பவர்களை அடையாளம் காட்டும்போது அவர்கள் அந்தத் தவறிலிருந்து மீண்டு புதுமனிதர்களாக, சமூகத்திற்கு பயனுடையவர்களாக, தமது பலவீனங்களை வெற்றி கொண்டவர்களாக வெளிவரும்படி தண்டனைகளும், நடவடிக்கைகளும் இருக்க வேண்டும்.

தண்டனையின் நோக்கம் இன்னும் உன்னதமானவனாக்குதலாக இருக்க வேண்டும்!

இப்படி இல்லாமல் அவர்களின் ஆளுமைகளைச் சிதைப்பவர்களாக, அவமானப்படுத்துவதாக, அவனது அவமானம் கண்டு உள்ளூர இரசிப்பவர்களாக சமூகம் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...