குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 21, 2021

தலைப்பு இல்லை

 

மனித குலத்தின் பிரச்சனைகளை ஸ்தூலமாக பொருள் முதன்மை வாதத்துடன் ஆராய்ந்த கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் என்ற ஆய்வின் மூலம் சூழல்தொகுதியின் வளங்கள் உற்பத்தியாக்கப்பட்டு நுகர்வுப் பொருளாக்கப்படுகிறது; இந்த நுகர்வுப்பொருள்களை சந்தையாக்கி அந்தச் சந்தை மூலம் பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது; இந்த உற்பத்தியை களத்தில் செய்வது உழைக்கும் வர்க்கம் என்றும் இவற்றை பொருளாதாரம் ஆக்குவது ஆளும் வர்க்கம் என்றும் இவற்றிற்கிடையிலான வேறுபாட்டினால் உழைக்கும் வர்க்கம் சுரண்டப்படுகிறது; அதே உழைக்கும் வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால் ஒருகட்டத்தில் இந்த நுகர்வு பூர்த்தியாகி உபரி உருவாகி இறுதியில் இந்த முதலாளித்துவம் சிதைந்து பொதுவுடமை வரும் என்று மார்க்ஸ் கட்டியம் கூற அப்படி நடக்கவில்லை!

இது பலரும் பலவாறாக கூறினாலும் இதற்கான காரணம் என்னவென்பது பற்றி எனது கருத்து மார்க்ஸ் உலகை பொருள்முதன்மை வாதத்துடன் மாத்திரம் நிறுத்திக்கொண்டதுதான் என்று நினைக்கிறேன்.

புலன் தாண்டிய மனம் என்ற கருவியே நுகருகிறது; அதைக் கட்டுப்படுத்துவதால்தான் நுகர்வு தடைப்படும் என்ற உண்மையை ஆசிய மைய சிந்தனையை உள்வாங்காததால் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

நான் மார்க்ஸியத்தை முழுமையாகப் படித்தவன் அல்ல; உலகப்பிரச்சனைகளுக்கு பொருள்முதன்மையைத் தாண்டிய சூக்ஷ்ம காரணியான மனம் என்ற ஒன்று இருக்கிறது; அதன் இயக்கம், இயற்கையான வழு என்பவை உலகை, மனிதனை அவனது இயக்கத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டின் ஆசான்களான அகத்தியர், பதஞ்சலி, புத்தர், விவேகானந்தர், அரவிந்தர் ஆகியவர்களின் "மனமுதன்மைவாத" சிந்தனை மரபைச் சார்ந்தவன்! மனமுடையவன் மனிதன், who have a mind is called as man, எனினும் தனிமனிதனதும், சமூகத்தினதும் பிரச்சனைகளுக்கான காரணம் என்று ஆராயும் ஒரு அறிவு வேட்கை கொண்டவன் என்ற அடிப்படையில் இவற்றை படித்துக்கொண்டிருக்கிறேன்.

மார்க்ஸைப் பற்றிய ஒளி விவரணப்பட அறிமுகம்: https://www.youtube.com/watch?v=gYmsbsNCySM&t=46s

இந்த விவரணப்படத்தைப் பார்த்ததால் நேற்றைய புத்தக கொள்வனவில் வாங்கிக்கொண்ட புத்தகம் இது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...