குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 12, 2021

தலைப்பு இல்லை

 

நண்பர் ஒருவர் அழைத்திருந்தார்; தான் "ஓம் சிவயநம – யநமசிவ – மசிவயந – வயநமசி – நமசிவய" என்ற மந்திரத்தை தினசரி உச்சரிப்பதாகக் கூறியிருந்தார்! இது சரியா? பிழையா என்ற குழப்பம்!

அதற்கு நாம் கூறிய பதில்:

நமக்கு குருமுகமாக உபதேசிக்கப்பட்டால் தாராளமாக எந்த சந்தேகமும் இன்றி உச்சரிக்கலாம்! இல்லாமல் எங்காவது வலைத்தளத்தில் கூறப்பட்டதைக் கண்டு உச்சரிக்கத் தொடங்குவதாக இருந்தால் இப்படியான "தலைமாறல்" உள்ள மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்காமல் எளிமையான "ஓம் நமசிவய" என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்திலிருந்து தொடங்குவது நன்மை தரும்!

மந்திரங்கள் என்பது வெறும் சப்தமல்ல; அதற்குள் சைதன்யம் - பிராணன் உறைந்திருக்கிறது. ஒவ்வொரு தடவை நாம் ஒரு சொல்லை உச்சரிக்கும் போதும் அது உடலில் ஒரு அதிர்வை ஏற்படுத்துகிறது. மந்திரங்கள் எமது ஸ்தூல சூக்ஷ்ம சரீரங்களை தாக்கக் கூடியவை. ஆகவே அவற்றைப் பயிற்சிப்பதில் கவனம் தேவை.

சரியாக சாதனை செய்து சித்திபெற்ற குருவிடம் பெறுதலே சரியானது! அப்படி எவரும் கிடைக்காவிட்டால் அதிக சிக்கலான பீஜங்கள் அடங்கிய, தலைமாறிய - யநமசிவ – மசிவயந – வயநமசி போன்ற - மந்திரங்களை எடுத்து முயற்சிக்காமல் ஸ்துல பஞ்சாக்ஷரம் - ஓம் நமசிவய  எடுத்துக்கொண்டு ஒரு சிறு துண்டில் எழுதி சிவன் கோயில் மூலவரிடம் அர்ச்சித்து, நந்திதேவரிடம் மானசீகமாக அனுமதி வாங்கிக்கொண்டு தினசரி ஒரே அளவாக நிர்ணயித்துக்கொண்டு (108/1008) தினசரி ஒரே நேரத்தில் சிரத்தையாக ஜெபித்து வரவேண்டும். ஒரு இலட்சம் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முறையான குரு உபதேசம் கிட்டவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் ஜெபித்துவரவேண்டும். இப்படிச் செய்ய, இறைவன் எந்த வடிவிலாவது முறையான உபதேசத்தை ஏற்பாடு செய்வான்.

இப்படி ஒரு லக்ஷம் எண்ணிக்கை சிரத்தையாக பூர்த்தி செய்யக்கூடியவன் மாத்திரமே மந்திர சாதனைக்கு தகுதியானவன். அப்படியில்லாமல் இந்த மந்திரத்தை ஜெபித்தால் இந்தப்பலன், அந்தப்பலன் என்ற செய்திகளைப் பார்த்துவிட்டு பௌதீக நன்மை கிடைக்கும், சித்திகள் கிடைக்கும், ஆற்றல் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மந்திரம் என்று சாதனை செய்யப்போகவேண்டாம்!

மந்திர சாதனை குருமுக மார்க்கம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...