குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, April 06, 2023

ஸ்ரீ வித்யா தீக்ஷை என்றால் என்ன? அதன் படிமுறைகள் என்ன? அது என்னை எங்கு கொண்டு செல்லும்?



தீக்ஷை என்பது ஒரு சக்திப்பரிமாற்றம்; எதற்கான சக்திப் பரிமாற்றம் ஒருவன் தனது உண்மையான அக ஆற்றலையும் உணர்ந்து அறிந்து, வளர்த்து அகத்தில் பாவனை சக்தியை அதிகரித்து வெளிப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் ஒரு பொறிமுறை தீக்ஷை எனப்படுகிறது. ஒருவன் தன்னில் உறங்கும் அக ஆற்றல்களை விழிப்பிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் வாழ்க்கையில் உயர்ந்த நோக்கமாக இருக்க முடியாது. இப்படி உறங்கிக்கொண்டிருக்கும் ஆற்றலை விழிப்பித்து ஒருவன் தன்னை பிரபஞ்ச மனதுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருவன் தனது தலைவிதியை மாற்றிக்கொள்ள முடியும். இந்த ஆற்றலைத் தருபவர் குரு என்றும் பெறுபவர் சீடன் என்றும் அழைகப்படுவர்.

ஸ்ரீ வித்யா க்ரமத்தின் அடிப்படை நாதம் என்ன? எமது ஸ்தூல நிலையின் பிடியில் இருந்து விடுபட்டு நாம் ஆன்மா என்ற உணர்வு பெறுதல். இதன் ஆரம்பம் திடமான வடிவம் என்று எமது அடையாளங்களாக நாம் சுமந்துகொண்டிருக்குக்கும் அனுமானங்களான அகங்காரங்களைக் கரைப்பதே ஸ்ரீ வித்யா சாதனையின் அடிப்படிய நோக்கம். இந்த அகங்காரங்களைக் கரைக்கும் செயல் ஏழு படிகளில் நடக்கிறது.

1.      ப்ருதிவி எனும் திட நிலை நில தத்துவம்

2.      அப்பு எனும் திரவ நிலை நீர் தத்துவம்

3.      அக்கினி எனும் நெருப்பு  நிலைத் தத ்துவம்

4.      வாயு எனும் அசைவு இயக்க நிலைத் த த்துவம்.

5.      ஆகாயம் எனும் இட (the identity) தத்துவம் த

6.      காலம் எனும் நேர (Time) தத்துவம்

7.      சூன்யம் எனப்பட்டும் அனைத்தையும் உள்ளடக்கிய தத்துவம்

இதில் முதல்வது படி, இறுகிய திட நிலையில் இருந்து எப்படி திரவ நிலைக்கு நாம் மாறுவது என்பது; எமது பிருதிவி த த்துவத்தை எப்படி அப்பு த த்துவமாக மாற்றுவது என்பது; வடிவத்திலிருந்து வடிவமற்ற நிலைக்கு எப்படிச் செல்வது என்பது;

இந்தச் சாதனை ஸ்ரீ வித்யா க்ரமத்தில் மகாகணபதி உபாசனையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மகாகணபதி உபாசனையின் நோக்கம் நான் உடல் மாத்திரம் என்று எண்ணுவதால் எம்மில் இருக்கும் சித்த மலங்களை கரைப்பதாகும். இதனாலேயே மகாகணபதி உபாசனையில் சதுராவர்த்தி தர்ப்பணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சதுராவர்த்தி தர்ப்பணத்தின் போது வாசனைத் திரவியம் சேர்த்த சுத்த ஜலத்தினை மஞ்சளால் பிடித்த பிரமிட் வடிவ கணபதியின் மீது மந்திரங்களுடன் சொல்லி அந்த திண்ம நிலையை கரைந்த திரவ நிலையாகுவது பயிற்சிக்கச் சொல்லப்படுகிறது. இங்கு பிடித்துவைக்கப்பட்ட மஞ்சள் ப்ருதிவி த த்துவத்தால் ஆன உடலையும் நீரைக்கொண்டு மந்திர அலைகளால் உடல் தாண்டிய நிலையை அனுபவிக்கும் தன்மையும் பெறப்படுகிறது. உடலில் இருந்த வண்ணம் உங்கள் உணர்வினை கூட்டு தெய்வ உணர்வுடன் கரைக்கும் ஒரு செயல் மகாகணபதி சதுராவர்த்தி தர்ப்பணம்.

இதை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்வோம்; ஒரே தட்டில் நான் கு மஞ்சளால் உருவாக்கப்பட்ட பிரமிட்டுகளை வைத்து நால்வர் தங்களைது தர்ப்பண அனுஷ்டானத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒவ்வொருவரிடமும் தனித்தனியான பிரமிட் இருக்கிறது. இது இவர்கள் ஒவ்வொருவரினது பிரிக்கப்பட்ட உணர்வின் குறியீடு; தர்ப்பணத்தின் மூலம் இந்த பிரமிட்டுகள் கரைக்கப்படுவது நால்வரது உணர்வும் ஒன்றுபட்ட நிலை.

சதுராவர்த்தி தர்ப்பணத்தினால் நாம் என்ன பலனை அடைகிறோம்? நான் கு தனித்த உணர்வு நிலையுடையவர்கள் தனித்த ஒருமித்த ஒருவராக உணர்வில் ஒன்றுபட்டுள்ளார்கள். இதன் மூலம் நாம் மற்றைய மூவரின் எண்ணத்தினையும் எமது எண்ணமாக உணரக்கூடிய சக்தி பெறுவோம். இது அவர்களிடம் சொல்ல வேண்டியது என்பதில்லை.

ஸ்ரீ வித்யா க்ரமத்தில் முதல் தீக்க்ஷை மகாகணபதி தரப்படுவது ஏன்? நான் இந்த உடல் என்ற குறுகிய எண்ணத்திலிருந்து விடுபட்டு விரிந்து பரந்த நிலையைப் பெறுவதற்காக. ஒரு ஸ்ரீ வித்யா உபாசகன் தன்னுடைய எண்ணங்களை ஆமோதித்து செயற்படும் மற்றவர்களை தன்னுடன் இணைப்பதற்காகவும் மற்றவர்களுடைய எண்ணம் நிறைவேற தன்னுடைய பங்களிப்பினைச் செய்யும் பரந்து விரிந்த மன நிலை பெறுவதற்காகவும் மகா கணபதி உபாசனையின் சித்தி பயன்படுகிறது.

N எண்ணிக்கையான நபர்கள் ஒன்றுபட்டால் அங்கு உருவாகும் சக்திய N (N – 1) என்று நாம் குறிப்பிடலாம்; 10 நபர்கள் ஒன்று பட்டு ஒரு செயலைச் செய்ய முற்பட்டால் அங்கு 90 மடங்கு ஆற்றல் உருவாகும். இந்த ஆற்றல் அதிவேகமாக வளரும். அதுபோல் அனைவரிலும் ஆன ந்தமும் மகிழ்ச்சியும் இப்படி வளரும்.  இதனால் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துக்கொள்ளலாம். பெரிதாகத் தோன்றும் பிரச்சனைகள் அற்பமாகிவிடும். இங்கு அதிமுக்கியமான விடயம் அனைவரும் நாம் அனைவரும் ஒன்றுபட்ட ஆன்ம சக்தி என்ற நிலைபெறுதல். இதன் மூலம் இந்த பிரபஞ்சத்தின் ஆற்றலை புரிந்துகொள்ளும் நிலையை நாம் பெறுவோம்.

கூட்டாகச் சேர்ந்த மனதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் யோசனைகள் தனிப்பட்ட பிள்வுபட்ட மனதிலிருந்து தோன்றும் எண்ணங்களை விட வித்தியாசமானவை. அது எப்போதும் பிரபஞ்ச உணர்வுடன் ஒத்திசைவாக இருப்பதால் எங்கும் தவறானவை நடக்க முடியாது.


இதுபோல் நாம் 5000 நபர்களை உருமாற்றவேண்டும் என்றால் இதன் வர்க்க மூல எண்ணிக்கையுடைய நபர்களை (70 பேர்) ஒருங்கிணைத்து ஒரு ஆற்றலாக்கினால் தானாக 5000 நபர்கள் சமூகத்தில் மாற்றத்தினை உண்டாக்குவார்கள்.  தனி நபராக எம்மால் சமூகத்தை மாற்ற முடியாது; ஆனால் ஒரு சமூகமாக நாம் இப்படி மாற்றத்தை உருவாக்க முடியும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...