குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 11, 2023

கிருஷ்ணா, ஸ்ரீ, செந்தில் சந்திப்பு

வருகைக்கு நன்றி கிருஷ்ணா, ஸ்ரீ, செந்தில்! 
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 
இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்
அவர்கள் வாழ்க்கையில் உயர நான் வழி காட்டியிருக்கிறேனாம்! ஒவ்வொரு வருடமும் தவறாமல் கடல் கடந்து விமானம் ஏறி என்னைப் பார்த்துச் செல்வது அதற்குரிய மரியதையாம்! 
இது நிபந்தனையற்ற அன்பினைத் தவிர வேறு ஒன்றும் இல்லை! 
நானோ தனிமையில் கற்றலையும், கற்றலால் வரும் சுகத்தையும் அனுபவிக்கும் போகி! எல்லோரையும் வரவேற்று உபசரிக்கும் நேரமில்லாதவன். 
எனது முதல் குரு நாதர் " தரவேண்டியது எல்லாம் விதைகளாக சித்தத்தில் பதித்தாயிற்று, மரமாகும் போது பறவைகள் தேடி வரும் என்றார். எனது ஸ்ரீ வித்யா குரு நாதர் உன்னிடம் இருப்பதை நிபந்தனையற்று பகிர்ந்து கொள் என்றார்! என்னிடம் பணம் இல்லை! அறிவும் தெளிவும் இருக்கிறது. அதை எழுத்தாக பகிர்ந்து கொண்டேன்! பலர் தெளிவிற்கு நாடி வந்தனர்!.
என்னிடம் ஏதும் சிறப்பு இருப்பதாக எனக்கு தெரியவில்லை! எவர் பிரச்சனை என்று வந்தாலும் அதை தெளிவுப்படுத்தி, அவர்களாகவே தீர்த்துக்கொள்ளும் படி வழிகாட்டும் ஆற்றலை அன்னை தந்திருக்கிறாள். தளராமல் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் ஆற்றலைத் தந்திருக்கிறாள். 
எனது கம்பனி வாழ்க்கையில் இருந்து நான் விலகும் போது எனது மேற்பார்வையாளர் இறுதி விருந்து போசனத்தில் எனது சிறப்பியல்புகளில் ஒன்று என "சுமன் தெளிவை வேண்டுபவர், அவருக்கு நிறுவனத்தில் தலைமைத் தெளிவு அதிகாரி என்ற ஒரு பதவியை உருவாக்கலாம் என்றார். 
நுவரெலியா சென்றோம்; நூற்றெட்டு பாண லிங்கங்களுடன் நுவரெலியா ஸ்ரீ காயத்ரி பீடத்தில் கோயில் உருவாகிறது; அதனை தலைமை அறங்காவலர் சந்திரமோகன் அண்ணாவுடன் கோயில்களை எப்படி சமூகத்துடன் இணைக்க வேண்டும்; அனாவசிய சடங்குகளுக்களை உருவாக்கி மக்களை குழப்பாமல் குரு நாதர் காட்டிய வழியில் எளிமையாக எவர் வந்தாலும் அவர்களுக்குரிய இடமாக கோயில் அவர்களுக்குரியது என்ற உணர்வினைத் தரவேண்டும் என்பது பற்றி உரையாடினோம். எவர் வந்தாலும் உணவருந்தாமல் செல்லக்கூடாது என்பது சாமியின் விருந்தோம்பல் பண்பு! அதை செவ்வனே மோகன் அண்ணாவும் செய்கிறார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...