குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 14, 2022

போதிமாதவனின் துக்க நிவாரண உத்தி

பலர் ஞானிகளின் போதனையை மதமாக்குவதன் நோக்கம் பிறர் மனதை மயக்குவதற்கே. பாரத ஞானிகள் மெய்யியலை தரிசனமாகவே கண்டார்கள். அதாவது ஒருவன் மெய்யியலை அறிவதன் மூலம் பிரபஞ்சத்தின் பல நுண்மைகளைத் தரிசிக்க முடியும் என்பதே பாரத மெய்யியலின் அடிப்படை. 

புத்தர் தான் தரிசித்த தரிசனத்தை எவரும் கலப்படம் செய்ய முடியாமல் வைத்திருக்கும் ஒரு தெளிவைக் கொண்டிருந்தார். 

ஞானம் - தெளிவு பெறவேண்டும் என்றால் அந்த தெளிவிவினை அடைய முடியாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன என்று அறிய வேண்டும். இப்படியான காரணங்கள் வெளியிலிருந்து வருவதைவிட நுண்மையாக உள்ளிருந்து வருவதே காரணமாக இருக்க முடியும். 

ஞானம் பெறுவதற்கு தடையாக இருப்பது மனிதன் எப்போதும், எல்லாவற்றிலும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பது. ஆகவே,

1) பிரபஞ்சம் முழுவதும் ஒவ்வொரு உயிரும் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை எப்படி அனுபவமாக அறிவது? 

2) இந்த துக்கம் எங்கிருந்து ஆரம்பமாகிறது?

3) இந்த துக்கத்தின் விருத்திகளை எப்படி நிரோதம் செய்யலாம்?

4) இந்த துக்கங்களை நிரோதம் செய்வதற்கான படிமுறை பாதை எது? 

துக்கத்தை நிவர்த்தி செய்யும் பாதையை புத்தர் ஆரிய அஷ்டாங்க மார்க்கம் அல்லது மத்திம பாதை என்று பெயரிட்டார். அதாவது எட்டுப் படிகளைக் கொண்ட மார்க்கம் அல்லது நடுநிலைப் பாதை என்பது இதன் பொருள். 

இந்த எட்டுப் படிகளும்,

1) சரியான பார்வை - ஒரு பொருளை நாம் பார்க்கும்போது தேவையற்ற பழைய நினைவுகள், மற்றவர்கள் எழுப்பிய சந்தேகங்கள் எதுவும் இன்றி அந்தப் பொருள் இருக்கும் நிலையை விருத்திகள் இன்றிப் பார்க்கும் ஆற்றல். 

2) சரியான நோக்கம் - நாம் ஒரு செயலில் ஈடுபடும்போது எமது நோக்கம் உளத்தூய்மையுடன் எங்கும், எவருக்கும் துக்கத்தை விளைவிக்காத பக்குவத்துடன் அணுகுதல். 

3) சரியான பேச்சு - தேவைக்கு அதிகமாக மற்றவர்களுக்கோ, எமக்கோ க்லேசம் விளைவிக்கும் வகையில் பேசாமல், நன்மைக்கும், ஒற்றுமைக்குமாக எமது வாக்சக்தியைப் பயன்படுத்தல். 

4) சரியான செயல் - நாம் உடலால் செய்யும் செயல்கள் தேவையற்றவகையில் எமக்கு கர்மச் சுழல்களை ஏற்படுத்தி எம்மை துன்பத்தில் ஆழ்த்தாமல் செயல்களைச் செய்யும் பக்குவம்.

5) சரியான வாழ்க்கை முறை - நாம் பொருள்தேடுவதிலோ, வாழும் முறையிலோ எமக்கோ மற்றவர்களுக்கோ துன்பம் ஏற்படாத வகையில் எமது வாழ்க்கை முறை இருத்தல். 

6) சரியான முயற்சி: நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? பெறாதா? என்று புத்தியால் ஆராய்ந்து செயற்படும் பண்பு. வெற்றி பெறாது என்று புத்திக்குத் தெரியும் விடயத்தில் தேவையற்று ஆற்றலைச் செலுத்தி தோல்வி அடைந்து அதனால் மனதை க்லேசத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது. 

7) சரியான விழிப்புணர்வு - செய்யும் செயல்கள் யாவும் இயந்திரத்தனமாகச் செய்யாமல் விழிப்புணர்வுடன் செய்வதால் எமது கர்மங்களுக்கு நாமே பொறுப்பாளி என்ற ஞானம் வாய்க்கிறது. வேறு யாரோ ஆகாயத்திலிருந்து கொண்டு எம்மை ஆட்டிப்படைக்கிறான் என்ற போலிப் பயம் அகன்று போகிறது. 

8) சரியான மன ஒருமைப்பாடு - மேலே உள்ள ஆறு படிகளையும் சரியாகக் கடைப்பிடித்தால் மனம் ஒருமைப்படும் தாரணை ஆற்றல் வாய்க்கிறது. இப்படி மனம் ஒருமைப்பட்டால் பிரபஞ்சத்தின் சூக்ஷ்மத் தன்மை வாய்ப்பதால் சாதகன் துன்பத்திற்கான சூக்ஷ்ம காரணங்களை தனது நுண்மையான மனதினூடாகவே சுய அனுபவமாக அறிந்து துன்பமற்ற இன்ப வாழ்க்கை பெறுகிறான். 

பதஞ்சலி இதே விஷயத்தை இயம, நியம, ஆசன, ப்ரணாயாம, பிரத்தியாகாரத்தால் மனம் தாரணைக்கு - ஒருமைப்பாட்டிற்கும் யோக்கியமாகிறது என்கிறார். 

புத்தரின் போதனை, உயர்ந்த வகை யோகத்தின் இன்னுமொரு வடிவம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...