குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, September 19, 2022

தலைப்பு இல்லை

ஒரே யோகத்தைப் பற்றி எழுதாமல் சற்று போகத்தைப் பற்றியும் எழுதுவோமே! வாழ்வின் நோக்கம் இன்பத்தினைப் பெறுதல்; இன்பத்தினைப் புலன்களால் பெற்றால் போகம்; புலனடங்கி மனம் உணர்வில் அடங்கிப் பெற்றால் யோகம். 

எப்போதும் மனம் புலன்களூடாக போகத்தின் வழி நிற்பதால் மனதை உணர்வில் உடனடியாக அடக்குதல் கஷ்டம். ஆகவே போகத்தை புலன்கள்வழி நாடும் மனம் எப்படிக் குழப்பமுறுகிறது என்று ஒருவன் அறிந்தால் மாத்திரமே அவன் அந்தப்பிரச்சனையிலிருந்து வெளிவரலாம். 

ஒரு பெண்ணை முதன் முதலில் பார்த்து மயக்கமடைந்து, புத்தி குழம்பும் ஒரு ஆணின் மனநிலை எத்தகைய படி நிலைக்கூடாகச் செல்லும் என்பதை திருவள்ளுவர் தகையணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் தந்திருக்கிறார். 

இந்தப்பகுதி களவியல் என்று கூறப்படுவதன் காரணம் ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே மட்டும் கொள்ளும் ஒழுக்கம் என்பதால். ஆகவே இதில் கூறப்படும் உணர்வுகள் எல்லாம் உறவு கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் இருக்க வேண்டியவை; அப்படியில்லாமல் வெளிப்படுத்தப்பட்டால் மற்றவர்களால் ஏளனப்படுத்தப்படும். 

களவியலை ஒழுங்காகக் கற்றுக்கொள்வதால் ஒருவன் தனது காதலில் வரும் மனச்சிக்கல்களை இயல்பாகப் புரிந்துகொண்டு தீர்த்துக்கொள்ளலாம். 

முதல் குறள்; 

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

ஒரு ஆண் தனக்குரிய பெண் என்று ஒருத்தியைக் காணும்போது அவள் அணங்கு - தேவலோகத்தில் இருக்கும் பேரழகியான அப்ஸரஸ் - என்றோ? அழகிய வண்ண மயிலோ என்று சந்தேகப்பட்டு தடுமாறி பிறகு இல்லை இல்லை இவள் கனமான குண்டலம் அணிந்த மானிடப்பெண் என்று தடுமாறி ஒருகணம் தனது நெஞ்சு குழம்பி நிற்பான்! 

இது மனக்கலக்கத்தின் முதற்படி! 

தனது மனதிற்குப் பிடித்த பெண்ணைக் கண்டு இந்தக் கலக்கம் ஏற்படாத ஆண் எவரும் உண்டோ?


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...