குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, September 01, 2022

மாத்தளை தமிழ் பாடசாலை உயர்தர கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப கல்வி நிலை பற்றிய ஒரு ஆய்வு by FTGM - STEM Unit

மாத்தளையில் பிரதான தமிழ் பாடசாலைகளின் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி பேறுபேறுகள் வெளிவந்த மாணவர்களுடன் இன்று ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற வகையில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினேன்.

இதன் பிரகாரம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெறமுடியாமல் இருப்பதற்கான காரணங்களாக கீழ்வரும் காரணிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது;

1) பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை; பாடசாலை முழுமையாகக் கற்பிக்கும் என்று மாணவர்கள் உறுதியாக நம்பவில்லை.

2) அனைத்து மாணவர்களும் தமது பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய டியுசன் ஆசிரியர்களையே நம்பியிருக்கிறார்கள்.

3) தாமாக படிக்கும் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு சில விடயங்கள் புரிய கஷ்டமாக இருக்கும்போது அதைத் தெளிவு செய்து உதவி செய்யக்கூடியவர்கள் (ஆசிரியர்கள், சிரேஷ்ட மாணவர்கள்) இல்லை. 

4) எல்லோரும் பாடத்திட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் மீண்டும் படிப்பதை மாத்திரம் படிக்கிறோம் என்று நினைத்து நேரத்தை வீணாக்கியிருக்கிறார்கள். எவரும் கோட்பாடுகளைப் புரிவதற்கோ, அதை வினாக்களுடன் தொடர்புபடுத்தி எழுதுவற்கோ பயிற்சிக்கவில்லை. பயிற்சி இல்லாததால் பரீட்சையில் குறித்த நேரத்திற்குள் விடை எழுதும் திறன் குறைவாக இருக்கிறார்கள். 

இந்த நான்கு காரணிகளில் முதல் இரண்டு காரணிகளும் கல்வித்திணைக்களம், பாடசாலை நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியவை. 

மற்றைய இரண்டு விடயங்களுக்கு மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம். 

இதன் பிரகாரம் இரண்டாம் தடவை தோற்ற இருக்கும் ஆர்வமுள்ள சில மாணவர்களுக்கு நான் தொடர்ச்சியாக சில பயிற்சியை வழங்க ஆரம்பித்துள்ளேன். 

இந்தப் பயிற்சி நெறியில் பங்குபெறும் மாணவர்கள் கீழ்வரும் பயிற்சிகளைப் பெறுவார்கள்:

1) ஒவ்வொரு பாட அலகினையும் புரிந்துகொள்வதற்கான உத்திகள்.

2) கேள்விகளைப் பயிற்சி செய்து ஞாபகசக்தியை விருத்தி செய்யும் முறைகள்.

3) தினசரி கற்பதற்கான அட்டவணையை வினைத்திறனாக தயார்படுத்தும் முறைகள்

4) தான் ஒவ்வொரு அலகிலும் எப்படி முன்னேறுகிறேன் என்பதை சுய பரிசோதனை செய்யும் பயிற்சிகள்.

5) பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற வகையில் உடல் நலம், மன நலம் எப்படிப் பேணுவது


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...