கத்தரி இயற்கையாக விளைவித்தால் அதன் பலனை ஆயுர்வேத அடிப்படையில் கூற வேண்டுமல்லவா,
கத்தரியை சம்ஸ்க்ருதத்தில் வ்ரிந்தக அல்லது வர்துக (மலையாளத்தில் வழுதலங்காய் என்பதற்கு அடிச் சொல்லாக இருக்கும்) என்று கூறுவார்கள். கத்தரி எப்படி செயல் புரியும் என்பதைப் பற்றி பாவ ப்ரகாச நிக்ஹந்து சகவர்கம் என்ற ஆயுர் வேதநூல் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது.
சுவை - மதுரம் எனும் இனிப்பு
குணம் - தீக்ஷணம் (எல்லா தாதுக்களையும் வலிமையாக ஊடுருவிச் செல்லக்கூடியது, அதனால் உஷ்ண குணமும், இலகுவானதும்)
விபாகம் என்றால் சமிபாடடைந்த பின்னர் என்ன செய்யும் என்பது, கத்தரி சமிபாடடைந்த பின்னர் காரச் சுவையாக செயற்படும்.
திரிதோஷத்தில் பித்தத்தை அதிகரித்து கபத்தைக் கூட்டி வாதத்தைக் குறைக்கும்
அதனால் ஈரலைப் பலப்படுத்தும், சமிபாட்டுக்கு உதவும், சுக்கில தாதுவைக் கூட்டி விந்து உற்பத்தியைக் கூட்டும்!
ஆயுர்வேதத்தில் கத்தரி ஆமணக்கெண்ணை தைலம் ஆமவாத (Rheumatoid Arthritis) சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
நவீன ஆய்வுகளில் கத்தரியில் இருக்கும் Chlorogenic acid என்ற பதார்த்தம் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும் என்று அறியப்பட்டுள்ளது. அத்துடன் கத்தரியில் Histamines அதிகளவு காணப்படுவதும் சிலரிற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணம். ஆயுர்வேதத்தில் தோல் நோய் உள்ளவர்கள் கத்தரி தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
கத்தரி மான்மியம் தொடரும்....
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.