குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, July 12, 2019

சமூகமும் ஆன்மீகமும்

ஆன்மீகம் என்பதன் பொருள் எமக்குள் இருந்து இயக்கும் ஆன்மாவின் கருவிகளை மீகித்தல் - உயர்த்துதல் என்று பொருள்படுகிறது. அதாவது தனிமனித மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாடு. 

இன்று ஆன்மாவை உயர்த்துதல் இல்லாமல் வெளிப்பகட்டு ஆன்மீகமாகி மக்களை அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் ஆடம்பரமாக்கப்படும் பணம் ஏழைமக்களில் வாழ்வினை உயர்த்தப் பயன்படலாம்! அவனை விட அதிகமாக கோயிலிற்கு செய்து பெரும் புகழ் பெறலாம் என்ற எண்ணம் மாறி என்னிடம் இருக்கும் அதிக பணம் மற்றவனை உயர்த்தப் பயன்படுத்தலாம்! இப்படியான சிந்தனை எமது கோயில் வழிபாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். 

அண்ணன் மல்லியப்புச்சந்தி திலகர் எழுதிய "மாரியம்மனுக்கோர் மனு" என்ற கவிதை மலையக தோட்டப்புற மக்களின் களங்கமற்ற பக்தியைப் படம்பிடித்துக்காட்டி, அந்த பக்திக்கு அர்ப்பணிக்கும் மன நிலையை சுட்டிக்காட்டுகிறார். 

இந்தக் கவிதை விவரிக்கும் சம்பவம் எனக்கு நடந்தது. பெருந்தோட்ட இளைஞர் குழு ஒன்று ஒரு முறை என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். என்ன நோக்கம் என்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதி கேட்பதற்காக? அவர்களை அமரவைத்து உரையாடினால் அதில் இருக்கும் 90% ஆனவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை. சரி கும்பாபிஷேகத்திற்கு எவ்வளவு செலவு என்றால் 30 இலட்சம் என்றார்கள்! இந்த முப்பது இலட்சத்திற்கு எல்லோரும் சேர்ந்து தொழில் தொடங்கி அதில் வரும் இலாபத்தை எடுத்து கும்பாபிஷேகம் செய்யலாமே தம்பி! என்றால் மௌனம். 

ஆனால் யதார்த்தத்தில் கும்பாபிஷேகத்திற்கும் பணம் கொடுக்கும் எல்லோரும் அந்த இளைஞர்கள் நாம் தொழில் தொடங்கப்போகிறோம் என்றால் எவரும் பணம் தரமாட்டார்கள் என்பதுதான் சமூகத்தின் மன நிலை! 

ஆக கோயில் கட்டி பாவம் போக்கலாம் என்ற சிந்தனை மாறி இன்னொருவன் உயர்ந்தால் நாமும் உயர்வோம், சமூகமும் உயரும் என்ற சிந்தனையுள்ள சமூகம் உருவாகவேண்டும்! 

இதன் அர்த்தம் கோயில்கள் தேவையில்லை என்பதல்ல, அவை சமூக கலாச்சாரத்தின் அத்திவாரம்! ஆனால் அந்த அத்திவாரத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடம் அழகாகவும், சிறப்பாகவும் இருக்க சரியான மூட நம்பிக்கை அற்ற சிந்தனை இருக்க வேண்டும். 

கோயிலின் அநாவசிய செலவுகளைக் குறைத்து மக்களின் கலாச்சார வாழ்வதார மேம்பாட்டினை முன்னெடுக்கும் திட்டங்கள் உருவாக வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...