நமது இயற்கை விவசாயக் கத்தரியின் சுவை, மணம், தரம் பற்றி கருத்தினை அறிவதற்காக ஒரு சிலருக்கு கொடுத்து வருகிறோம். நல்ல feedback கிடைத்து வருகிறது!
Organic என்பதற்கும் இயற்கை விவசாயம் என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. Organic என்பது இரசாயன விவசாயம் போன்றே தாவரத்தை மனிதன் இடுபொருள் இட்டு இயற்கைப் பொருட்களால் செயற்கையாக வளர்க்கும் முறை.
இயற்கை விவசாயத்தில் காட்டில் ஒரு இயற்கைச் சூழலில் எப்படி தாவரம் தானே வளர்வதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வது மட்டும்தான்! ஆகவே செடி தனக்குத்தேவையானதை எடுப்பதற்கு உதவி செய்வது மட்டும் தான் எமது பணி! ஆகவே இப்படி விளைவிக்கப்படும் தாவர உணவுகள் அதிக மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்! இது எமது கத்தரிகளில் நிருபணமாகிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஆடி அமாவசையில் கத்தரிச் சமையல் பற்றி Lavanya Satheeshwaran அக்காவின் கருத்து! நன்றி அக்கா!
***********************************************************************
//என் அருமை தம்பி ஸக்தி சுமன் ஓர் "அறிவியல் விவசாயி".(அது மட்டுமல்ல பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றவர்). அவரது இன்னொரு ஆராய்ச்சியின் வெற்றி தான் நான் இன்று சமைத்த கத்தரிக்காய் புளிக்குழம்பு. எவ்வித இரசாயனப் பொருளையும் பயன்படுத்தாமல் இயற்கை பசளைகளை மட்டும் பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் நான் வெட்டும் ஐந்து கத்தரிக்காயில் மூன்று பூச்சாகவே காணப்படும். இதன் தோற்றத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
இன்று ஆடி அமாவசை விரதம். என் கணவருக்கு ஆரோக்கியமான, சுவையான கத்தரிக்காய் குழம்பு சமர்பணம். தம்பி ஸக்தி சுமணனுக்கு நன்றிகள்... //
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.