குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, July 04, 2019

தலைப்பு இல்லை

வாராஹி உபாசனை என்ற இந்த நூல் நான் சிறுவனாக இருக்கும் போது கைக் காசு (அது தாங்க pocket money) சேர்த்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று! வாங்கும் போது எதற்காக வாங்கினோம் என்று தெரியவில்லை! ஆனால் பிற்காலத்தில் குருமண்டலத் தொடர்பால் தெரிந்துக் கொள்ள வேண்டியதற்கான முன்னறிவிப்பு என்பது புரிந்தது. 

வாராஹியைப் பற்றி தேடுபவர்களுக்கு இந்த நூலில் கடைசியில் துர்க்கைச் சித்தர் பெருமான் சொல்லும் ஒரு அரிய செய்தி; 

"மஹாவராஹி தேவியைப் பற்றி மந்திர சாஸ்திர நூல்களில் பல செய்திகள் உள்ளன. சில இடங்களிலும், சில விஷயங்களிலும் ஒரே செய்தி ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும். சாஸ்திரங்களைப் படிப்பதில் ஒரு வகையான சிறந்த பழக்கம் உண்டு. இதை குருமுகமாக கற்க வேண்டும். தெரிந்த விஷயம் இதுவே தெரியாத விஷயத்துடன் கலந்து போய்விடும். மந்திரங்கள் அதன் செயல் தன்மை, அதன் பரிமாணம், அதன் பயணகாலம், பயணதூரம் இவைகளைப் பற்றி எல்லாம் குருவருளால் தான் சித்திக்கும். புரச்சரணை நெறியில் இருந்து வழுக்கி விழுந்துவிடக் கூடாது. இது தன்னைத் தானே கீழே தள்ளுவதுடன், தன்னால் உதவிபெற வந்தனவையும் சேர்த்துத் தள்ளிவிடும்.

எல்லா தேவி மந்திரங்களையும் தானே குருவாக இருந்து தனக்கே ஜெபம் செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பரதேவியான வாராஹியிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. கருணை நிறைந்தவள் இவள்,  அத்துடன் கடுமையும் கொண்டவள். அருளைத் தரும் இவளே அழிவையும் செய்பவள். குளிர்மையானவள் இவள், அதே சமயத்தில் கொடும் தணலாகச் சுடுபவள். எனவே தான் வாராஹி தேவியை நன்கு ஞானம் பெற்றவர்களிடத்தில் உபதேசம் பெற வேண்டும் என்று குருமார்கள் சொல்லிக் கொண்டு வந்துள்ளார்கள். பழைய கால குருமார்கள் தங்கள் சீடர்களின் நல்ல சந்தோஷத்தை கேட்கவும் அதைக் கண்களால் பார்க்கவும் ஆசைப்பட்டார்கள், அவர்கள் மஹனீயர்கள் - மஹான்கள்! 

ஆகவே ஆர்வமுள்ளவர்கள் விஷய ஞானத்தைத் தேடாமல் குருமுகமாய் அறிய வேண்டும் என்பது இந்த ஆஷாட நவராத்ரியில் உபாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...