குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 15, 2019

உண்மை சாதனை

உண்மை சாதன
**********************

Image may contain: drawing
சிரத்தையுள்ள மாணவன் தனது குருவிடம் தியானம் பயின்று வந்தான். கடுமையான பயிற்சிக்குப் பின்னர்
குருவிடம் மகிழ்ச்சியுடன் வந்து
குருவே, எனக்கு தியானம் சித்தித்து விட்டது, இன்று தியானம் அருமையாக இருந்தது, நல்ல அனுபவம் என்றான்.
அதற்கு குரு, நல்லது அன்பனே இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய் என்றார்.
அதற்கு சீடன் " நான் ஆன்மீகத்தில் நல்லதொரு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன், மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது, மூச்சு ஆழமாக செல்கிறது, தெய்வீக அனுபவங்கள் வருகிறது, ஆகவே நிச்சயமாக நான் முன்னேறி விட்டேன் குருவே என்றான் உறுதியாக.
அதற்கு மீண்டும் குரு " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று சொல்லிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
சீடனுக்கு பெரிய ஏமாற்றமாகிப்போகிவிட்டது. குரு தனது முன்னேற்றத்தை பெரிதாக எடுக்காமல் தன்னை ஊக்கப்படுத்தவில்லை என்று மனம் வருந்திக்கொண்டான். இரண்டொரு வாரம் செல்ல மன உணர் ச்சிகளும், உடல் சோம்பலும் வர தியானம் தடைப்பட்டது. தியானத்திற்கு உட்கார முடியவில்லை. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தியானம் செய்ய முடியவில்லை என்றவுடன் தனது குரு தன்னை ஆசீர்வதிக்கவில்லை என்று மனம் புலம்பி வருத்தப்பட்டு விரக்தி அடையத்தொடங்கினான். வீட்டில் ஒரே சண்டை சச்சரவு ஆகத்தொடங்கி விட்டது.
நேரே குருவிடம் சென்று, குருவே என்னால் எனது சாதனையை தொடரமுடியவில்லை, மனம் ஒருமைப்படவில்லை என்றான்
அதற்கு குரு அதே பழைய தொனியில் " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியைத் தொடர்ந்து செய்" என்றார்.
அதற்கு சீடனே குருவே என்னால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை என்றான்,
அதற்கு மீண்டும் " நல்லது, இதுவும் கடந்து போகும், பயிற்சியை தொடர்ந்து செய்" என்று கூறிவிட்டு தனது வேலையைப்பார்க்க சென்றுவிட்டார்.
கதையின் நீதி தியானம் சாதனை என்பது கணியன் பூங்க்குன்றனார் கூறியது போல் "வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே" என்பது போல் நன்றாக நடக்கிறது என்று மனம் மகிழ்ந்துகொண்டிருப்பதும், நன்றாக நடக்கவில்லை என்று துன்ப படுவதையும் விடுத்து தொடர்ந்து பயிற்சியை செய்வது மட்டுமே தேவையானது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...