குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 14, 2019

தலைப்பு இல்லை

நேற்று ஒரு காரியம் நடைபெறுவதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய ஐந்து நிபந்தனைகளை பதிவிட்ட போது தம்பி Nirosh Shanthan 05 வது காரணியான விதி சரியாக இருந்தால் மிகுதி நாலு காரணியும் சரியாகத்தானே வேண்டும் என்ற ஒரு சிந்தனைப்பூர்வமான கேள்வியை கேட்டிருந்தார். 

இது விதி என்பது என்ன என்பதை சரியாக சிந்திப்பதற்கும் வாழ்க்கையின் யதார்த்தத்தை சரியாக புரிவதற்குமுரிய நல்ல கேள்வி. 

ஒரு செயலின் வெற்றியில் 80% பங்கு செய்பவனில் கட்டுப்பாட்டிலும் 20% பங்கு செய்பவனின் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருக்கிறது. 80% எமது கைகளில் இருக்கிறது எனும் போது நாம் அந்த செயலில் ஊக்கமுடன் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற உறுதியைத்தரும், இந்த 80% முயற்சி இல்லாமல் செயலில் வெற்றி இல்லை, அதேவேளை 80% முயற்சி செய்தாலும் 20% விதி என்பதுதான் வெற்றியை தீர்மானிக்கிறது. 

ஆகவே 20% ஆகிய விதி மட்டும் வெற்றியை தீர்மானிப்பதில்லை, காரியத்தை செய்வதற்குரிய முறையை அறிந்து தெரிந்து செய்தல் - Correct approach, காரியத்தை செய்வதற்குரிய உங்களுடைய மன நிலை - your attitude and mindset, காரியம் சித்தியாவதற்கு தேவையான வளங்கள் - Human and financial resources, உங்கள் முயற்சி - effort ஆகிய 80% பூர்த்தியானால் மட்டுமே விதி பலனைத் தருவதாகிறது. 

விதி மட்டும் பலனைத் தருகிறது என நம்பும் போது எமது இச்சா சக்தி (Will power) இனால் செய்யக் கூடிய 80% வாய்ப்பினை தவறவிடுகிறோம். 

எமது 80% உழைப்பு மட்டும் தான் பலனைத் தருகிறது எனும் போது அது நடைபெறாமல் போகும்போது மனச் சோர்வடைந்து அடுத்த வாய்ப்பினை தவற விடுகிறோம். 

ஆக இந்த நிபந்தனைகளை சரியாக புரிந்து நடப்பது மிக அவசியமானது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...