நேற்று ஒரு காரியம் நடைபெறுவதற்கு ஸ்ரீ கிருஷ்ணன் கூறிய ஐந்து நிபந்தனைகளை பதிவிட்ட போது தம்பி Nirosh Shanthan 05 வது காரணியான விதி சரியாக இருந்தால் மிகுதி நாலு காரணியும் சரியாகத்தானே வேண்டும் என்ற ஒரு சிந்தனைப்பூர்வமான கேள்வியை கேட்டிருந்தார்.
இது விதி என்பது என்ன என்பதை சரியாக சிந்திப்பதற்கும் வாழ்க்கையின் யதார்த்தத்தை சரியாக புரிவதற்குமுரிய நல்ல கேள்வி.
ஒரு செயலின் வெற்றியில் 80% பங்கு செய்பவனில் கட்டுப்பாட்டிலும் 20% பங்கு செய்பவனின் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருக்கிறது. 80% எமது கைகளில் இருக்கிறது எனும் போது நாம் அந்த செயலில் ஊக்கமுடன் செய்ய ஆரம்பிக்கலாம் என்ற உறுதியைத்தரும், இந்த 80% முயற்சி இல்லாமல் செயலில் வெற்றி இல்லை, அதேவேளை 80% முயற்சி செய்தாலும் 20% விதி என்பதுதான் வெற்றியை தீர்மானிக்கிறது.
ஆகவே 20% ஆகிய விதி மட்டும் வெற்றியை தீர்மானிப்பதில்லை, காரியத்தை செய்வதற்குரிய முறையை அறிந்து தெரிந்து செய்தல் - Correct approach, காரியத்தை செய்வதற்குரிய உங்களுடைய மன நிலை - your attitude and mindset, காரியம் சித்தியாவதற்கு தேவையான வளங்கள் - Human and financial resources, உங்கள் முயற்சி - effort ஆகிய 80% பூர்த்தியானால் மட்டுமே விதி பலனைத் தருவதாகிறது.
விதி மட்டும் பலனைத் தருகிறது என நம்பும் போது எமது இச்சா சக்தி (Will power) இனால் செய்யக் கூடிய 80% வாய்ப்பினை தவறவிடுகிறோம்.
எமது 80% உழைப்பு மட்டும் தான் பலனைத் தருகிறது எனும் போது அது நடைபெறாமல் போகும்போது மனச் சோர்வடைந்து அடுத்த வாய்ப்பினை தவற விடுகிறோம்.
ஆக இந்த நிபந்தனைகளை சரியாக புரிந்து நடப்பது மிக அவசியமானது.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.