ஒரு முறை ஸ்ரீ போக நாத சித்தர் நீண்ட தவத்தில் ஸ்ரீ புவனையை தியானித்துக் கொண்டிருந்தார். நீண்ட தியானத்தின் பின்னர் அன்னை அண்டத்தின் இயக்கத்தையெல்லாம் காட்டி அண்டத்திலிருந்து சக்திகளை எல்லாம் தாவர வர்க்கமும், தாது வர்க்கமெல்லாம் எப்படி ஈர்த்து வளர்கிறது என்று போகனுக்கு காட்டினாள். எல்லாவற்றையும் பார்த்துத் தெளிந்துக் கொண்டிருந்த போகனுக்கு அன்னை தன் புன்சிரிப்புடன் கேட்டாள்.
போகா, எனக்கு ஏன் புவனேஸ்வரி என்று பெயர்? உனக்கு ஏன் போகன் என்று பெயர்?
அதற்கு போகரோ,
அன்னையே, தாங்கள் அண்டத்தின் இயக்கத்தை பூமியில் வனங்கள் எனும் தாவர வர்க்கத்தின் மூலம் ஈர்த்து பூமியை வளப்படுத்தும் தலைவி என்பதால் பு + வன + ஈஸ்வரி, பூமியிலுள்ள வனங்கள் எல்லாவற்றிற்கும் ஈஸ்வரி,
இந்த ஞானத்தையெல்லாம் தங்கள் அருளால் போகித்து பேரின்பம் காண்பதால் எனக்குப் பெயர் போகன் என்றார்.
அன்னையும் சிரித்துக் கொண்டு வனத்திலுள்ள மூலிகைகள் எல்லாம் எப்படி அண்டத்துடன் தொடர்புக் கொள்கிறது என்ற ஞானம் பெற்றாய் போகா, பெற்ற ஞானத்தை பாமரனும் பயன் பெற விஷத்தை அமிர்தமாக மாற்றி ஆறறிவு தத்துவத்தை விளக்கி நவபாஷாணச் சிலையை தயார் செய்து பிரதிஷ்டை செய்வாய் என்று ஆசி கூறி பேரொளியாய் மறைந்தாள்.
{அவரவர் மன நிலைக்குத் தக்க கதையாகவோ, கருத்தாகவோ, கற்பனையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும், }
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.