குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 28, 2019

தலைப்பு இல்லை

இன்று பலரும் சித்தர்கள் இப்படிக்கூறியுள்ளார்கள், அப்படிக் கூறியுள்ளார்கள் என்று ஆள் ஆளுக்கு பதிவு போட்டுக் கொண்டு தகவல் களஞ்சியமாக மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அனேகமானவை எவராவது எழுதுவதை கண்மண் தெரியாமல் பிரதி செய்து போடுவது. 

இப்படி மற்றொருவர் கூறியதை தகவலாக பகிர்ந்துக் கொண்டு இருக்காமல் நாம் இந்த சமூகத்திற்கு பிரயோசனமாக ஏதாவது செய்ய விரும்பினால் அர்ப்பணிப்புடன் ஏதாவது ஒரு சித்தரின் நூலை எடுத்து ஆழமாக கற்று, அதில் கூறிய பயிற்சிகளை அனுபவமாக கண்டு, தமது அனுபவத்துடன் விளங்க கூறுவது உபயோகமானது. 

மேலும் கருத்துக் கூறும் போது ஆழமாக கற்றபின்னர் கருத்துக் கூறுவதும், தமது அனுபவத்தினூடாக கருத்துக் கூறுவதும் அந்த துறைக்கு நன்மை பயப்பவை!

அதீத நம்பிக்கையின் அடிப்படையிலும், யதார்த்த மனதிற்கு ஒவ்வாத விதத்திலும், சுய அனுபவம் இன்றியும் கூறப்படும் கருத்துக்கள் அந்தத் துறையை வளரவிடாமல் தடுத்து விடும். 

இன்று சித்த மருத்துவத்தில் இத்தகைய ஒரு பிளவு நிலை காணப்படுகிறது. BSMS படித்த பட்டதாரிகள் சித்த மருத்துவத்தின் அடிப்படையை அதன் சூக்ஷ்மத் தன்மையினையும் தத்துவங்களையும் புரிந்து கொள்ளாமல் அவற்றை நவீன ஆய்விற்கு உட்படுத்தித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க, அடுத்த பக்கம் நாம் சித்தர் பரம்பரை என்று மனம்போன போக்கில் அந்த சித்தர் சொன்னார் இந்தச் சித்தர் சொன்னார், என்று ஒரு கூட்டம் கருத்து வீசிக் கொண்டு இருக்க, கடைசியில் நான் பெரிதா நீ பெரிதா என்ற விவாதத்தில் ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாமல் காலம் கழிந்து கொண்டு போகும். 

சித்த மருத்துவத்தின் வேர்களைப் புரிய அது எழுதப்பட்ட தமிழ் மொழியின் நுணுக்கங்கள் புரிய வேண்டும், தமிழ் மொழியின் நுணுக்கம் புரிந்தாலும் அவை பிரயோகிக்கப்பட்ட நிலையின் குழூஉக் குறி தெரியவேண்டும், குழூஉக்குறி தெரிந்தாலும் பின்னர் காலத்திற்கு ஏற்ப எப்படி அதை பிரயோகிக்க வேண்டும் என்ற அனுபவ அறிவு வேண்டும், இந்த அனுபவ அறிவு வந்தால் அது இக்காலத்து நவீன அறிவியலில் எங்கு பொருந்துகிறது, எங்கு பொருந்தவில்லை என்ற நுண்ணறிவினால் ஆய்தல் வேண்டும். இப்படி ஒரு முறைப்படுத்தப்பட்ட பலரின் ஒருங்கிணைந்த உழைப்புத்தான் அந்தத் துறையை முன்னேற்றும்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...