குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, November 29, 2011

நாடிகளூடான பிராண சுற்றோட்டம் (இந்திய யோகசாத்திர அடிப்படையில்)


இதனுடன் தொடர்புடைய பிற பதிவுகள்

  1. மனித உடலில் பிராண ஓட்டம் (சீன பிராண சாத்திர அடிப்படையில்)
  2. பிராண சாத்திர விளக்கம் (சீன அடிப்படையில்)
  3. பிராண சக்தியின் தன்மைகள் - 01
  4. பிராண சக்தியின் தன்மைகள் - 02
  5. போதிதர்மரின் நோக்குவர்ம சித்தியும் இந்திய யோக இரகசியமும்
  6. நோக்குவர்மமும் தாரணா சக்தியும்: http://yogicpsychology-research.blogspot.com/2011/11/blog-post_18.html
  7. நோக்கு வர்மமும் பிராண சக்தியும் (நோக்கு வர்மத்தின் செயல்முறை இரகசியம்)

=========================================================================================

நேற்றைய பதிவில் சீன பிராண சாத்திரத்தின்படி பிராணனது ஓட்டம் எப்படி என்பதனைப் பார்த்தோம். இன்று இந்திய யோக சாத்திரத்தின் பிராண சுற்றோட்ட அடிப்படைகளான நாடிகள் பற்றிய  விளக்கத்தினைப் பார்ப்போம். 

பிராணன் ஸ்துல சூட்சும உடலில் செல்லும் கண்ணுக்கு தெரியாத இழைகள் நாடிகள் எனப்படும். இவை உடலில் காணப்படும் இரத்தம் செல்லும் குழாய்களோ, நரம்புகளோ இல்லை, சூஷ்ம உடலில் காணப்படும் பிராண ஓட்டப்பாதைகளாகும். சரீரத்தில் பல்லாயிரக்கணக்கான நாடிகள் அடங்கியுள்ளன, சித்தர்களின் கணக்குப்படி அவை 72000 ஆகும். இவை வாய்க்கால்கள் என்றால் பிராணனின் சேமிப்பிடம் சக்கரங்கள், இவை பிரதானமாக  ஆறாக (௦6) குறிப்பிடப்பட்டபோதும் இன்னும் பல உபசக்கரங்கள் உண்டு. யோக சாதனைக்கு பயன்படுபவை இந்த ஆறதரங்களே! இந்த நாடிகளின் பிராண ஓட்டத்திற்கும் மனம், உடல் ஆகியவற்றின் நிலைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. 

எல்லா நாடிகளும் உற்பத்தியாகும் இடம் காண்டம் எனப்படும். இது ஆசன வாய்க்கும் பிறப்பு உறுப்பின் அடிப்பாகத்திற்கும் இடையே மூலாதார சக்கரத்திற்கு மேலே அமைந்துள்ளது. யோக நுல்களில்  இதன் வடிவம் முட்டை வடிவானதாக குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்து பல நாடிகள் உண்டானாலும் முக்கியமானவை 14 நாடிகள் முக்கியமானவை. அவை
  1. சுழுமுனை
  2. இடை
  3. பிங்கலை
  4. காந்தாரி
  5. ஹஸ்தஜிஹ்வை
  6. குஹு
  7. சரஸ்வதி
  8. பூசை
  9. சங்கினி
  10. பயஸ்வினி
  11. வாருணி
  12. அலம்பூசை
  13. விச்வோதரை
  14. யசஸ்வினி ஆகியனவாகும்.
இவற்றில் யோகப்பயிற்சிக்கு சுழுமுனையே ஆதாரமாகும். மேலே கூறப்பட்ட காண்டத்திலிருந்து உருவாகும் சுழுமுனை மூலாதார சக்கரத்தின் நடுமையத்துடன் இணைக்கப்படுகிறது. இது தற்கால உடற்கூற்றியலுடன்(Anatomy) ஒப்பிடுவதானால் மூள்ளந்தண்டு முடிவுறும் பகுதியில் குதிரை வால் எனப்படும் நரம்புபின்னல்கள் காணப்படும இடத்துடன் ஒப்பிடலாம். படம் பார்க்கவும். 


 
சூட்சும சரீரத்தின் கேந்திர ஸ்தானம் இந்த காண்டம் எனும் பகுதியாகும். இதிலிருந்து முள்ளந்தண்டுக்கு இணையாக மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி என்ற ஐந்து ஆதாரங்களும் ஆக்ஞா, துவாதசாந்தம் என்பன மூளையை சார்ந்தும் உள்ளன. இவற்றின் செயற்பாடு பிராணசக்தியினை சேமிபதாகும். இந்த சேமிப்பிலிருந்து நாடிகள் வழியாக உடலின் மேற்பரப்புவரை பிராண சக்தி கடத்தப்படுகிறது. இவ்வாறு கடத்தப்படும் பிராண சக்திகள் தங்கும் புள்ளிகள்தான் (Staying nodes) வர்மம் எனப்படும். 

இந்த புள்ளிகள் 108, அவற்றை கீழ்வருமாறு குருதேவர் அகத்தியர் கூறியபடி சக்கரங்களுடன் தொடர்புபடுத்தி பிரிக்கலாம்.
  1. தலை முதல் கழுத்துவரையுள்ள வர்மம் 25 இவை ஆக்ஞா, துவாதசாந்த சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
  2. இருகரங்களிலிமுள்ள வர்மங்க்கள் 14, இவை விசுத்தி சக்கரத்தினை அடிப்படையாக கொண்டவை. 
  3. கழுத்து முதல் நாபிவரையுள்ள வர்ம புள்ளிகள் 45 இவை விசுத்தி, அனாகத சக்கரங்களை அடிப்படையாக கொண்டவை.
  4. நாபியிலிருந்து குதம் வரையிலான வர்ம புள்ளிகள் 9, இவை மணிப்பூரகம், சுவாதிஷ்டானத்தினை அடைப்படையாக கொண்டவை.
  5. கால்களில் உள்ள வர்மங்கள் 15, இவை மூலாதாரத்தை அடிப்படையாக கொண்டவை. 


இந்த புள்ளிகள் மூலம் உடலிலுள்ள பிராணசக்தியின் அளவினை கூட்டலாம், குறைக்கலாம், தடுக்கலாம். சித்தர்கள் இந்த பிராண சுழற்சியின் பயன்பாட்டினை மூன்று கலைகளாக பிரித்து தந்திருக்கிறார்கள். 
  1. யோகம்
  2. மருத்துவம்
  3. போர்க்கலை
யோக கலையினை பின்பற்றவேண்டியவர்கள் கவனிக்க வேண்டியது  சுழுமுனை, இடகலை, பிங்கலை முதலான மூல நாடிகளுடான பிராண சுற்றோட்டத்தினை கட்டுப்படுத்துவதாகவும், மருத்துவம், போர்க்கலை அதனை வர்மசாத்திரமாகவும் பயன்படுத்துகிறது. உண்மையில் இந்த இடைத்தொடர்புகளை நன்கு கற்றறிவது இக்கலைகளில் தேர்ச்சி பெற உதவும். யோக சாதனை முக்கியமான பகுதி நாடிகளில் செயற்பாட்டை முழுமையாக அறிவதும் ஆகும். 

அடுத்த பதிவில் இது பற்றிய மேலதிக விபரங்களை பற்றி பார்ப்போம்! 

1 comment:

  1. அற்புதமான தகவல்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...